Monday 30 December 2013

அப்பாவும் நானும்! தொடர்பதிவு-3!

- 2 comments

வணக்கம் நண்பர்களே !
                                                  இதற்க்கு முன் நான் எழுதிய அப்பாவும் நானும் பகுதியை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் . படிக்காதவர்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் .

[மேலும் படிக்க>>>]

Tuesday 17 December 2013

இந்த கடையில மொபைல் வாங்குறீங்களா ! கொஞ்சம் யோசிங்க !

- 1 comments
வணக்கம் நண்பர்களே !
                                                    இது ஒரு விழிப்புணர்வு பதிவாக எழுதுகிறேன் ! இன்றைய வாழ்வில்  அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு கருவி அலைபேசி. இந்த அலைபேசி வாங்க சென்ற இடத்தில் நான் பட்ட வேதனையை உங்களுடன் பகிர்கிறேன் !
[மேலும் படிக்க>>>]

Tuesday 10 September 2013

பதிவர் சந்திப்பில் சிறப்பு அழைப்பாளர்கள் நடிகர் கமல் மற்றும் ரஜினி !!!!

- 3 comments
வணக்கம் நண்பர்களே !
                               பதிவர் சந்திப்பு தொடர்பாக நிறைய கருத்துகளும், சர்ச்சைகளும் இன்னும் பதிவுலகில் ஓய்ந்த பாடில்லை ! இதை  பற்றிய சிறு அபிப்ராயம் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன் !


[மேலும் படிக்க>>>]

Tuesday 3 September 2013

2ஆம் ஆண்டு பதிவர் சந்திப்பு ! என் பார்வையில்!

- 22 comments
வணக்கம் நண்பர்களே !
                                           
 பதிவர் திருவிழாவுக்கு முதல் நாள் இரவு  9 மணியில் இருந்தே விழா  ஜுரம்  என்னை தொற்றி  கொண்டது! மெதுவாக என் மனைவியிடம் இந்த விஷயத்தை  சொல்லி மேலும் எனது உடைகளை துவைத்து  இஸ்திரி பண்ண  கேட்டுக்கொண்டேன் !

[மேலும் படிக்க>>>]

Monday 15 July 2013

தேமுதிக அதிருப்தி MLA க்கள் செய்தது சரியா? ஒரு அலசல்!

- 2 comments
 வணக்கம் நண்பர்களே !
                                                   இன்றைய தமிழக அரசியலில் மிகவும்  சூடான செய்தி  தேமுதிக அதிருப்தி M L A க்கள் கட்சி மாறி வாக்களித்தது பற்றித்தான்.அதைபற்றிய அலசல்தான் இந்த பதிவு !

[மேலும் படிக்க>>>]

Wednesday 10 July 2013

நாட்டாமை ! தீர்ப்பை மாத்தி சொல்லு !லொள்ளு சபா!!

- 3 comments
வணக்கம் நண்பர்களே!
                                                 விஜய் டிவியில எல்லாரும் லொள்ளு சபா
பார்த்திருப்பீங்க! அது  மாதிரி நானும் ஒரு script  ரெடி பண்ணியிருக்கேன்! என்ன படம் எழுதலாம்னு   யோசிச்சப்போ நம்ம சரத்குமார் நடிச்சு  கே.எஸ் ரவிக்குமார் இயக்குன  நாட்டாமை படம்தான் ஞாபகம் வந்துச்சு!அதுல இருந்து ஒரே ஒரு சீன் மட்டும் என் கற்பனைக்கு எட்டிய வரைக்கும் மாத்தி எழுதியிருக்கேன் !படிச்சு ரசிங்க!!

[மேலும் படிக்க>>>]

Wednesday 3 July 2013

இனிமே குடிக்க மாட்டேன்!!

- 14 comments
இதுவரை யாருக்கும் தெரியாமல் குடித்தது இன்று மனைவிக்கு தெரிந்து விட்டது ! காலையில் படுக்கை அறையில் மறைத்து வைத்து பாட்டிலோடு குடித்ததை பார்த்து விட்டாள். என்னுடைய அப்பாவிடம், அம்மாவிடமும் சொல்லிவிடுவாளோ என பயந்தபடியே அவளிடம் ப்ளீஸ் என கெஞ்சினேன் ! ஒரு முறைப்புடன் அறையை விட்டு வெளியேறினாள்! நானும் அலுவலகம் கிளம்ப தயார் ஆனேன் ! மீண்டும் குளித்து முடித்து சாப்பாடு வைக்கும்போது பேசாமல் இருந்தாலும் கண்களால் என்னை தீயாக எரித்து விடுவது போல என்னை பார்த்தாள்.

[மேலும் படிக்க>>>]

Saturday 13 April 2013

வானவில்லின் 50 வது பதிவு !எமனுக்கு டார்கெட்டு !

- 10 comments
  வணக்கம் நண்பர்களே !
                                                  அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இது வானவில்லின்  50 வது பதிவு! மேலும்  வானவில் நேற்றுடன் ஒரு வருடத்தினை நிறைவு செய்தது .இதுவரை தொடர்ந்து தளத்திற்கு வந்து கருத்தளித்து ஊக்கமளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வானவில் தனது இதய பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறது!  என்னுடைய அனைத்து பதிவுகளுக்கும்   தவறாது  கருத்தளிக்கும் நண்பர் திரு .திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நண்பர் திரு.ஜெயதேவ் அவர்களுக்கும் நன்றிகள் பல.

[மேலும் படிக்க>>>]

Wednesday 3 April 2013

பரதேசி படத்தில் ஏன் இல்லை இளையராஜா ?

- 6 comments
வணக்கம் நண்பர்களே !
  
 சமீபத்தில் வெளிவந்திருக்கும் பரதேசி படம் மக்களிடையே  நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதாக பத்திரிக்கை வழியாகவும்  பதிவுகளின் வழியாகவும் படித்து தெரிந்து கொண்டேன்.ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருதை தட்டி சென்றது மற்றுமொரு சிறப்பம்சம். தொடர்ந்து இயல்பான,மற்றும் தரமான படங்களை கொடுத்து கொண்டிருக்கும் திரு.பாலா அவர்களுக்கு இந்த விருது ஒன்றும் புதிதல்ல! இந்த படமும் அவருக்கு புதிதல்ல!வாழ்த்துக்கள் பாலாசார்!தமிழ் சினிமாவை வாழவைத்துக்கொண்டிருக்கும் சிலரில் நீங்களும் ஒருவர்!

இந்த பதிவு விமர்சன பதிவு  அல்ல.  இந்த திரைப்படத்தில்  இளையராஜா ஏன் பங்கேற்க்கவில்லை? என என் மனதில் ஒரு சிறிய சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது .அதற்க்கு விடை காணும் முடிவாக சில கருத்துக்களை இங்கே உங்களிடம்  முன் மொழிகின்றேன் . இது எனது தனிப்பட்ட கருத்து  மட்டுமே! இதை ஏற்றுக்கொள்ளவேண்டும்  என எந்த நிர்பந்தமும் கிடையாது !


இதுவரை வெளிவந்த பாலா படங்களில் மிகப்பெரிய வெற்றி என கொண்டாடப்படும் சேது மற்றும் பிதாமகன் இரண்டிலுமே இசை  இசைஞானியே ! அப்படி இருக்க ஒரு உழைப்பு சுரண்டலும் , அடிமைகளின்  வாழ்க்கை வரலாற்றையும்  அடிப்படையாக கொண்ட, கதைக்களம் வலுவாக உள்ள  இந்த படத்திற்கு பாலா ஏன் இளையராஜாவை அணுகவில்லை ! அல்லது அணுகி நிராகரிக்கப்பட்டதா? அல்லது  வேலைப்பளுவினால (இளையராஜாவிற்கு ) ஒத்துக்கொள்ளமுடியாமல் போனதா என்பதை பாலா  மட்டுமே சொல்ல முடியும்.

 எத்தனையோ புதிய இயக்குனர்கள் அதுநாள்வரை ஒன்றாக வேலை செய்த இசையமைப்பாளர்களிடம்  இருந்து பிரிந்து வந்து இசைஞானியின் இசைமட்டுமே அந்த படத்திற்கு சரியாக இருக்கும் என முடிவில் உறுதியாக இருந்து இசைஞானியிடம் பணியாற்றியிருக்கிறார்கள்(மிஷ்கின்,கௌதம் மேனன்). அப்படியிருக்க இது நாள்வரை இசைஞானியிடமும் ,யுவனிடமும் இணைந்து பணியாற்றிய பாலாவின்  இந்த முடிவுக்கு என்ன காரணம் ?

* சற்று ஆராய்ந்து பார்த்தால் ,இளையராஜா எப்படி அவருடைய துறையில் வல்லவரோ ! அதே நிகருக்கு  வைரமுத்துவும் அவருடைய துறையில் வல்லவர் என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும் . 
 

*  இந்த படத்தில்  எந்த அளவுக்கு இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டுமோ  அதே அளவுக்கு கருத்தாழம் மிக்க  பாடல்கள் இடம்பெற வேண்டும்  என பாலா கருதியிருக்கலாம்.அதை கருத்தில் கொண்டு வைரமுத்துவுடன் பணியாற்ற விருப்பபட்டிருக்கலாம்!(1980 கால கட்டத்தில் இளையாராஜாவின் பாடல்கள்  வெற்றிபெற வைரமுத்துவின் வைர வரிகளும் முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது !)

* மேலும் இதுபோன்ற கதை வலுவுள்ள படத்திற்கு வேறு பாடலாசிரியரை அணுகினாலும் வைரமுத்து பாடல்களை போல உயிரோட்டமாக இருக்குமா என்பது சந்தேகமே ! கதைக்களம் கிராமத்து பின்புலத்துடன்  அமைந்திருப்பதால் பாடல்களும் கிராமிய வாசனையுடனும் வார்த்தைகளுடனும் அமைய வேண்டும் என அனைத்து பாடல்களையும் வைரமுத்துவுக்கே எழுத  வாய்ப்பளித்திருக்கிறார்.தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் இவர் எழுதிய "கள்ளி காட்டில் பிறந்த தாயே " என்ற பாடல் சில வருடங்களுக்கு  முன் தேசிய விருதை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா,வைரமுத்துவுடன் பணியாற்ற எப்படியும் சம்மதிக்க மாட்டார்.அதே நேரம் நல்ல இசை மற்றும் பாடல்களும் வேண்டும்.  இந்நேரத்தில், சமீபத்தில் வெளியான தெய்வத்திருமகள் ,மதராசபட்டிணம் ஆகிய படங்களில் பாடல்கள் மட்டுமல்லாது பின்னணியிலும் அசத்தியிருப்பார் ஜி.வி.அதனால் இதையும் கவனத்தில் கொண்ட பாலா, இவை அனைத்தையும் அலசி ஆராய்ந்து இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்  .


MSV -கண்ணதாசன் கூட்டணிக்கு பிறகு ,தமிழ் திரை உலகம் அதிகம்  ரசித்தது இசைஞானி -வைரமுத்து கூட்டணி தான் . இந்த கூட்டணி முறிந்ததால் இசை ரசிகர்கள்  இழந்த பாடல்கள் அதிகம் .இதை கருத்தில் கொண்டு மீண்டும் அவர்கள் இணைய வேண்டும் அன்பது எனது விருப்பம் மட்டும் அல்ல  ஒட்டுமொத்த இசை ரசிகர்களின் விருப்பம் .


நன்றியுடன்

இரா.மாடசாமி




  
[மேலும் படிக்க>>>]

Tuesday 2 April 2013

காதல் கிறுக்கல்!!!!

- 11 comments
வணக்கம் நண்பர்களே !
                                                  இந்த பதிவில்  எனது கிறுக்கல் ஒன்றினை பகிர்கிறேன் ! என்ன செய்வது ! காலத்தின் கட்டாயம்  இதை எல்லாம் படித்து தொலைக்கவேண்டுமே என நீங்கள் மனதுக்குள் முனுமுனுப்பது எனக்கு  புரிகிறது ! வேறு வழியே இல்லை  நீங்கள் இதை படித்தே ஆகவேண்டும் ! இந்த கிறுக்கலை தமிழில் ஏதோ சொல்வார்களே ! ஆங் ! சிலேடை ! அதான் ! அதுமாதிரி முயற்சி பண்ணியிருக்கிறேன் ! பிடித்திருந்தால் கருத்தளிக்கவும் ! இன்னொரு வைரமுத்து வருவதை தடுக்காதீர்கள் ! சூ ! இந்த காக்கா வேற !



கவனிப்பு !

கோவிலில் கடவுளை

கவனிக்க மறந்த நான்

உன்னையே கவனித்தேன் !என்பதை

நீ கவனித்தாய் ! அதை நானும்  கவனித்தேன் !


இருந்தும்  நான் கவனித்ததை கவனித்துவிட்டு

நீ   கவனிக்காதது போல காட்டிகொண்டதையும்,

யாரேனும் உன்னை கவனிக்கிறார்களா ? என

நன்கு கவனித்துவிட்டு,மீண்டும்

கவனமாக நீ என்னை கவனிப்பதையும்

நான் கவனித்தேன் !

ஒரு பெண்ணின் கவனத்தை பெறுவது என்பது

எவ்வளவு பெரிய விடயம் என

இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும் !

நம் இருவர் கவனிப்பையும் தற்செயலாக

கோவிலுக்குள் வந்த என் தந்தை

கவனித்துவிட ! அப்புறம் என்ன !!!

வீட்டில்  எனக்கு  செம கவனிப்புதான் !!!!
 *******************************************************************************
அன்பே ! உன்னை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை !

என்று சொல்லமாட்டேன் ! ஏன் என்றால் !

அதுவும் வார்த்தைகளாவதால் !

*********************************************************************************
 சாலையில் இருவரும்

எதிரெதிர் திசையில் கடந்து செல்கிறோம் !

நான் ! திரும்ப திரும்ப  திரும்பி பார்க்கிறேன் !

நீ என்னை திரும்பி பார்ப்பாய் என்று !

ஆனாலும் நீ திரும்பாமல் போகிறாய் !

ஒருவேளை நீ திரும்பி பார்ப்பதை

நான் திரும்பி பார்த்துவிடுவேன் என நினைத்தாயோ !

திரும்ப எப்போது இதுபோன்று சந்தர்ப்பம் வரும்

என்று திரும்பியபடியே வீடு வந்தேன் !
**********************************************************************************

உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டாய் !

எனக்கு உன்னை பிடிக்கும் என்றேன் !

பிறகு ? என தொடங்கினாய் !

உன் புன்னகை பிடிக்கும் என்றேன்!

மெல்லிய புன்னகையோடு ! அப்புறம் என அழகாய் கேட்டாய் !

உன்னை கரம் பிடிக்க பிடிக்கும் என்றேன்  !

அடுத்து என தொடர்ந்தாய் !

என் வேர்வையில் உன்னை நனைக்க பிடிக்கும் !

 நாணத்துடன், கண்ணை மூடிக்கொண்டு ! அப்புறம்  என்றாய் !

உன் அம்மாவை பாட்டியாக  பார்க்க பிடிக்கும் என்றேன் !

சற்று நிருத்திவிட்டு  ! உனக்கு என்ன பிடிக்கும் என நான் கேட்க

நிறுத்தி சொன்னாய்!

எனக்கு உன் தீராக்காதல் பிடிக்கும் என்று !






நன்றியுடன் !

இரா.மாடசாமி



[மேலும் படிக்க>>>]

Monday 25 March 2013

நான் ரசித்த தமிழ் சினிமா!ஒரு பார்வை !!-4

- 4 comments
 வணக்கம் நண்பர்களே!
                                                நான் ரசித்த தமிழ் சினிமா ! நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடர்கிறேன் ! இது வரை பழைய திரைப்படங்களை அதிக அளவில் குறிப்பிட்டு இருந்தேன் . இந்த முறை 2000 பின் வெளிவந்த ஒரு படத்தினை  பகிர்கிறேன் !


நான் ரசித்த தமிழ் சினிமா அனைத்து பதிவுகளும் படிக்க கீழே சொடுக்கவும் !

நான் ரசித்த தமிழ் சினிமா!ஒரு பார்வை !!-1

நான் ரசித்த தமிழ் சினிமா!ஒரு பார்வை !!-2

நான் ரசித்த தமிழ் சினிமா!ஒரு பார்வை !!-3

அழகிய தீயே !     இந்த படத்தை எத்தனை பேர் ,எத்தனை முறை பார்த்திருக்கிறீர்களோ!
நான் சுமார் பத்து முறை பார்த்திருக்கிறேன் ! முதலில்  இந்த படத்தை தயாரித்ததற்க்காக திரு.பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு   நன்றியும் , வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறேன் ! இவர் நடிக்கும் அத்தனை திரைப்படங்களும் மசாலா வாசனை. ஆனாலும் இவர் தயாரிப்பது  யதார்த்த திரைப்படங்களை மட்டுமே ! தரமான படங்களை மட்டுமே கொடுப்பேன் என கங்கணம் கட்டிக்கொண்டு  எவ்வித மசாலா சமரசமும் செய்து கொள்ளாமல் படம் தயாரிப்பது இவரது தைரியத்தின் உச்சம் .அதற்காகவே தனியாக ஒரு சல்யூட் !

 கதையின் கரு

சினிமாவில் சாதிக்க துடிக்கும்  நாயகன் மற்றும் அவன் நண்பர்களுக்கும்  , வாழ்க்கையில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாகவும்  சுதந்திரமாகவும்  முன்னேற துடிக்கும்  நாயகிக்கு இடையிலான ஒரு கதை .


சாதாரண கதைதான்  ஆனாலும் , அதை அருமையாக  திரைக்கதை அமைத்து  கொஞ்சம் காதல் , நகைச்சுவை, செண்டிமெண்ட்  என  கோர்வையாக படமாக்கியிருக்கும் திரு. ராதா மோகனுக்கு பூச்செண்டு அல்ல பூந்தொட்டமே கொடுக்கலாம் ! பூம்!  என்ற  ஒரு வார்த்தை எப்படி காதலின் முகவரி ஆகிறது என்பதை சொன்ன விதம் அருமை !. முக்கியமாக படத்தில் துளியிலும் ஆபாசம் இல்லை என்பது கூடுதல் சிறப்பு!

சினிமாவில் பெரிய இயக்குனாராக வர நினைக்கும் பிரசன்னா திரைத்துறையின் திடீர் வேலை நிறுத்தத்தால் கஷ்டப்படுகிறார் . நண்பனின் உதவியால்  கிடைத்த சின்ன சின்ன வேலையை செய்கிறார்.அப்போது, கல்யாணம் மூலம் தனக்கு பிரச்சினை வருவதை தனது தோழியின் அண்ணன் மூலம்  பிரசன்னாவிடம் கூறி  நாயகி நவ்யா நாயர் அறிமுகமாகிறார் .பிரசன்னாவும் உதவ முன்வறுகிறார் .ஒரு கட்டத்தில் கல்யாண மாப்பிள்ளையாக வரும் பிரகாஷ் ராஜிடம் பிரசன்னா தானும் நவ்யா நாயரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக பொய் சொல்கிறார்.இதை அறிந்த நவ்யா நாயர் பிரசன்னா மீது கோபம் கொள்கிறார் . இதற்கிடையில்  இதை உண்மை என நம்பி அவர்கள் இருவருக்கும் திருமணம் முடித்து வைக்கிறார் பிரகாஷ்ராஜ் . இதற்க்கு பின் இருவருக்கும் ஒரு வீடு ஒன்றை பரிசளித்து வாழ்த்திவிட்டு செல்கிறார் . அதன்பின் அவர்களுக்குள் இருந்த மோதல் எப்படி காதலாக மாறுகிறது ! அவர்கள் எப்படி இணைந்தார்கள்  என்பது மீதி கதை .


நாயகனாக வரும் பிரசன்னாவிற்கு இந்த படம் ஒரு திருப்புமுனை என்ற சொல்லலாம் ! நண்பர்களுடனான காட்சியில்   சிரிக்க வைக்கிறார். குறிப்பாக   நாய் வாங்க போகும் இடத்தில் இடம் மாறி விபசார விடுதிக்கு செல்லும் காட்சி! வயிறு வலிக்கும் சிரிப்பு! உங்களுக்காக அந்த வீடியோவை இணைத்துள்ளேன் ! கண்டு ரசிக்கவும்! நவ்யா நாயருடனான காதலை சொல்ல போகும் கடைசி கிளைமாக்ஸ் காட்சியிலும் , நண்பன் இறந்தவுடன் அழும் காட்சியிலும் நம்மை  நெகிழ வைக்கிறார் !




நவ்யா நாயர் ! தோற்றத்தில் மட்டுமல்ல நடிப்பிலும்  அழகு ! பிரசன்னா உடனான மோதல் பின் சமரசம் என நடிப்புக்கு வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார் ! அமெரிக்கா return மாப்பிளையாக பிரகாஷ் ராஜ் பின்னி எடுத்திருக்கிறார். பிரசன்னாவின் நண்பர்களாக வரும் குமாரவேல், திலீபன் , மற்றுமொரு நண்பர் !அண்ணாச்சியாக வரும் MS பாஸ்கர் (மனுஷன் ஆஸ்பத்திரி காட்சியில் அழ வைத்துவிடுகிறார் )

இந்த படத்தில் மற்றுமொரு கதாநாயகன்! வசனகர்த்தா  விஜி! இவருடைய  வசனங்கள் படத்திற்கு வலு சேர்க்கிறது ! குறிப்பாகஹோட்டல் விருந்து நிகழ்ச்சியில் பிரசன்னா தனது காதலியை வர்ணிக்கும் இடம் .

எனக்கு பிடித்த மேலும்  சில வசனங்கள்


*  தன் தாய் கர்ப்பானவள் அப்படின்னு நீ  எந்த அளவுக்கு நம்புறியோ அந்த அளவுக்கு என்னை  நம்பலாம் !

* இந்த உலகமே அழிஞ்சு போயி , உலகத்துல இருக்குற கடைசி பொண்ணு நீயா இருந்தா கூட நான் உன்னை திரும்பி பார்க்கமாட்டேன் !

இப்படி படம் முழுக்க ரசிக்க வைக்கும் வசனங்களுடன் காட்சிகள் !

படத்திற்கு இசை ரமேஷ் விநாயகம் ! அனைத்து பாடல்களும் சூப்பர் ! விழிகளின் அருகில் வானம் காலம் கடந்து நிற்கும் !

இந்த படத்தை பற்றி இரண்டு விடயங்கள் சொல்லியே ஆகவேண்டும்

1. சினிமாவிற்குள் சினிமாவின் கதையை எடுத்தால் வெற்றி பெறாது என்ற செண்டிமெண்டை உடைத்த படம்

2. சமூக ஆர்வலர் , ஆசிரியர்  திரு . தமிழருவி மணியன் அவர்கள்  அவருடைய  ஊருக்கு நல்லது சொல்வேன்  என்ற புத்தகத்தில்  இந்த படத்திற்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார் !



உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது  அவசியம் இந்த படத்தை பார்க்கவும் !


நன்றியுடன் !
இரா. மாடசாமி


    
[மேலும் படிக்க>>>]

Thursday 21 March 2013

அரசியல் தலைவர்களுக்கு பிடித்த வர்த்தக விளம்பரங்கள்!!!

- 6 comments
வணக்கம் நண்பர்களே !
                                                  தமிழகம்   முழுவதும்  ஈழ  தமிழர்களுக்காக குரல் கொடுத்து  போராடி வரும் மாணவ நண்பர்களுக்கு வானவில்  சிரம் தாழ்ந்து நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்து கொள்கிறது


[மேலும் படிக்க>>>]

Friday 1 February 2013

கௌதம் மேனனுக்கும் பாலாவுக்கும் என்ன வித்தியாசம்?

- 5 comments
வணக்கம் நண்பர்களே !
                                                 இந்த பதிவு நான் ரசித்த நகைச்சுவை துணுக்குகள் மற்றும்  நானே சிந்தித்த ! சரி வேணாம் , குப்புற படுத்து  யோசிச்ச ஒரு மேட்டரையும் பற்றியது ! பகிர்கிறேன் ! உங்களுக்காக !!  

---------------------------------------------------------------------------------------------------------------

வந்தவர் : சார் ! என் பொண்டாட்டிய  காணும் சார் !

டாக்டர் : அதுக்கு போலீஸ் ஸ்டேஷன் போங்க சார் ! இங்க எதுக்கு வந்தீங்க !

 வந்தவர்: சாரி சார்  ! சந்தோஷத்துல எங்க போறதுன்னு தெரியல! அதான் இங்க வந்துட்டேன் !

--------------------------------------------------------------------------------------------------------------

மகன் : அப்பா அப்ப்ளிகேஷன்ல mother tongue  போட்டுருக்கே  அங்க என்ன போடணும்

அப்பா: ரொம்ப நீளம்ணு  போடு !

-------------------------------------------------------------------------------------------------------------

Interviewer : What is  Microsoft Excel !

Candidate : It is new brand of Surf Excel ! ( எந்த கேள்வி கேட்டாலும் சளைக்காம பதில் சொல்வோர் சங்கம் !எப்பூடி !)

-----------------------------------------------------------------------------------------------------------

 மனைவி : என்னங்க ! இன்னைக்கு ரசம் வைக்கவா ? சாம்பார் வைக்கவா ?

கணவன் : முதல்ல எதாவது வை!அப்புறம் பேரு வைக்கலாம் !!!

---------------------------------------------------------------------------------------------------------

ஒரு  எறும்பும் யானையும்  ஒரு நாள் லவ் பண்ணி கல்யாணம் செய்தது . ஆனா அடுத்த நாளே யானை செத்து போச்சு ! உடனே எறும்பு ரொம்ப பீல் பண்ணி சொல்லுச்சாம்  , ஒரு நாள் காதலுக்காக  ஆயுசு முழுக்க குழி தோண்ட வேண்டியதா போச்சே !
 -------------------------------------------------------------------------------------------------------------


இயக்குனர்  கௌதம் மேனனுக்கும் பாலாவுக்கும்  என்ன வித்தியாசம் ?

முன்னவர் நடிகர்களின் அழகுக்கு அழகு சேர்ப்பவர் !
பின்னவர்  நடிகர்களின் அழகுக்கு அழுக்கு சேர்ப்பவர் !

---------------------------------------------------------------------------------------------------------

    வாழ்க்கையில முக்கியமான  மூணு  விஷயம் !

1.Break fast

2.Lunch

3.Dinner

நமக்கு  சோறுதான் முக்கியம் !

 ---------------------------------------------------------------------------------------------------------------


சரி நண்பர்களே ! நகைச்சுவை அனைத்தும்  பிடித்திருந்தால் கருத்துரைக்கவும்  !



நன்றியுடன் !

இரா.மாடசாமி














[மேலும் படிக்க>>>]

Friday 18 January 2013

அறியாத வயசு ! புரியாத மனசு !

- 1 comments

வணக்கம் நண்பர்களே !
                                                நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுகிறேன்!  உங்கள் அனைவருக்கும் காலம் கடந்த இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!!!

[மேலும் படிக்க>>>]
 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger