Saturday 13 April 2013

வானவில்லின் 50 வது பதிவு !எமனுக்கு டார்கெட்டு !

  வணக்கம் நண்பர்களே !
                                                  அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இது வானவில்லின்  50 வது பதிவு! மேலும்  வானவில் நேற்றுடன் ஒரு வருடத்தினை நிறைவு செய்தது .இதுவரை தொடர்ந்து தளத்திற்கு வந்து கருத்தளித்து ஊக்கமளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வானவில் தனது இதய பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறது!  என்னுடைய அனைத்து பதிவுகளுக்கும்   தவறாது  கருத்தளிக்கும் நண்பர் திரு .திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நண்பர் திரு.ஜெயதேவ் அவர்களுக்கும் நன்றிகள் பல.




வானவில்  தளத்தில்  நகைச்சுவை மற்றும் கற்பனை  சார்ந்த பதிவுகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம்  கொடுக்கப்படும் என்பது நீங்கள் அறிந்ததே . எதேச்சையாக எனது காதல் கிறுக்கல் என்ற கவிதை தொகுப்பு அதிக பாராட்டை பெற்றது  என்னை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்து  விட்டது. மேலும் கவிதைகள் தளத்தில் எனது  கவிதையை வெளியட்டதற்க்கு  நண்பர் திரு . பிரேம் அவர்களுக்கும், முதன்முதலாக வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய  திரு.கிரேஸ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்! இது போன்ற ஊக்கங்கள் மட்டுமே  என்னை துவண்டுவிடாமல் பார்த்துகொள்கிறது.உங்களின்  ஆதரவோடு இரண்டாவது ஆண்டில் அடி எடுத்துவைக்கிறேன். தொடர்ந்து உங்களின் ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் !



 

 



*********************************************************************************

50-வது பதிவும் நகைச்சுவை பதிவுதான் ! நான் ரசித்த சில நகைச்சுவை சிதறல்களை உங்களுடன் பகிர்கிறேன் !


வீட்டில தூங்கிகிட்டு இருந்த சேல்ஸ் REP ஒருத்தனுக்கு திடீர்னு செத்து போகிற மாதிரியும்   எமன் அவனை  பாசக்கயிறை கட்டி இழுத்துகிட்டு போகிற மாதிரியும் கனவு வந்துச்சு ! இதை  நெனச்சு  அவன் திடீர்னு எழுந்து அழ ஆரம்பிச்சுட்டான் !அப்போ எம தர்மன் அவன் முன்னாடி வந்து ஏன் அழுவுறன்னு கேட்டாரு ? உடனே அவன் நடந்ததை  சொல்லவும் , எமன்  அவனுக்கு ஆறுதல் சொல்லி , 100 வயசு வரைக்கும் உனக்கு சாவு கிடையாது அப்படின்னு வரம் கொடுத்துட்டு  போயிட்டாரு ! அதை கேட்ட சேல்ஸ் REP ரொம்ப சந்தோசமா தூங்கபோனான் ! ஒரு வாரம் கழிச்சு ஒரு சாலை விபத்துல அவன் இறந்து போயிட்டான் ! மேல பொய் நேரா எமன்கிட்ட போய், எனக்கு 100 வயசு வரைக்கும் சாவு கிடையாதுன்னு சொன்னீங்க ! இப்ப  ஏன் என் உயிரை எடுத்தீங்கன்னு ?கேட்டான்

அதுக்கு எமன் சொன்னாராம் , சாரி தல ! YEAR END ! டார்கெட் achieve பண்ணனும் ! இல்லாட்டி அப்பரைசல்ல  கைய வசுருவாங்க !அப்படீன்னு

 **********************************************************************************
கீழே  உள்ள  நகைச்சுவை மற்றும் படங்கள் அனைத்தும் 
Facebook ல்  நான் ரசித்தது ! நீங்களும் சிரித்து மகிழுங்கள் ! 


நீங்க இதுக்கும் சிரிக்கலேன்னா நல்ல மருத்துவரை பார்ப்பது நல்லது ,,,

இப்படிதான் விவாகரத்து நடக்குதோ ?

படிச்சுப் பாருங்க கண்டிப்பா சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க.

கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”

“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”

“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”

“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”

“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”

“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”

“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”

“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”

“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”

“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”

இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.

“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.

“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”



**********************************************************************************
Photo: Unnalam Enda Tsunami Thookala :-D

வேற ஒன்னும் இல்ல ! தம்பி கொஞ்சம் உணர்ச்சிவசபட்டுட்டாறு அதான் !!!!!

*******************************************************************************
Photo


நன்றியுடன்

இரா.மாடசாமி

Related Posts Plugin for WordPress, Blogger...

10 comments :

  1. வாழ்த்துக்கள் சார்...

    கட்டையால் பிகரை மயங்கச் செய்த உம்மை எண்ணி வியக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே !

      Delete
  2. ஹா... ஹா... நகைச்சுவையுடன் ஐம்பதாவது பகிர்வு... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆதரவுடன் தொடர்கிறேன் ! நன்றி நண்பரே !இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  3. எதேச்சையா இந்த பக்கம் வந்தேன் நம்ம பேரை போட்டு கவுரவப் படுத்திட்டீங்க, நன்றி ஜோக்ஸ் நல்லாயிருக்கு!!

    ReplyDelete
  4. Today, I went to the beachfront with my children. I found a
    sea shell and gave it to my 4 year old daughter and said "You can hear the ocean if you put this to your ear." She placed the shell to her ear and screamed.
    There was a hermit crab inside and it pinched her ear.
    She never wants to go back! LoL I know this is totally off topic
    but I had to tell someone!

    Also visit my blog - galaxy siv

    ReplyDelete
  5. Greetings! Very useful advice within this post! It is the little changes that make the
    most significant changes. Thanks for sharing!

    my weblog; bodas

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger