Friday 31 August 2012

திரும்பி பார்க்கிறேன்! கழுத்து சுளுக்கிகிச்சு!!!

- 13 comments
வணக்கம் நண்பர்களே ! 

                                                என்னடா  தலைப்பு  இப்படி இருக்கிறதே என  பார்க்க வந்தீர்களா!  இந்த பதிவு என்னுடைய 25 வது  பதிவு ! மிகவும் முக்கியமானது! திரும்பி பார்க்கிறேன்னு மட்டும்  போட்டா  வரமாட்டீங்கன்னு எனக்கு தெரியும் ! அதனால் தான் கழுத்து சுளுக்கிகிச்சு  அப்படீன்னு  சேர்த்து போட்டேன்  ! எப்படி ?!  




[மேலும் படிக்க>>>]

Wednesday 29 August 2012

நான் ரசித்த தமிழ் சினிமா ! ஒரு பார்வை!!-3

- 6 comments
வணக்கம் நண்பர்களே ,
                                         பதிவர் சந்திப்பு முடிந்த கையுடன் இந்த பதிவை எழுதலாம் என  எண்ணியிருந்தேன்!ஆனால் முடியவில்லை! 

இதற்க்கு முந்தைய பதிவை படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் 



இந்த வரிசையில்  நாம்  ரசிக்கபோகும் படம் உதிரிப்பூக்கள்! தமிழ் சினிமாவை உலக சினிமாவிற்கு உயர்த்திய ஒரு உன்னத கலைஞனின் படைப்பு!

1979 ல் வெளிவந்த இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர்.திரு.மகேந்திரன்.  உதிரிப்பூக்கள்!தலைப்பே க(வி)தை சொல்லும்! டைட்டில் கார்டிலேயே இயக்குனர் நமக்கு கதையின் மீதான எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திவிடுகிறார். ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் பரிதாபத்துடன்  எதிர்நோக்கும் காட்சி, நம்முடைய இதயத்தின் வலிமையை  சோதித்து பார்க்க சொல்கிறது !


பள்ளியின் தாளாளர் மற்றும் பெரிய மனிதரான விஜயன்  சொல்வதுதான் சட்டம் அந்த கிராமத்தில் !   (அஸ்வினி)மனைவியின்  உடல்நிலையை காரணம் காட்டி அவரின் தங்கையை மணம்முடிக்க முயல்கிறார். இதற்க்கு அவரின் மாமனாராக வரும் சாருகாசன் மறுக்கிறார். மனைவியின் மீது பஞ்சாயத்தில் களங்கம் சுமத்தி பிரிகிறார். பின் வேறு ஒரு பெண்ணை மணக்கிறார். உடல் நிலை மோசமாகி அஸ்வினி இறந்து போக, குழந்தைகளை வளர்க்க விரும்பும்  அஸ்வினியின்  தங்கையை அந்த பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ஒருவர் மணம் முடிக்க விரும்புகிறார். இதை விரும்பாத விஜயன் அவரை களங்க படுத்த முயல அதுவரை பொறுத்திருந்த ஊர் மக்கள் பொங்கி எழுகிறது. அவர் என்ன ஆனார் என்பது எதிபார்க்காத கிளைமாக்ஸ் . 

ஊர் பெரிய மனிதராக விஜயன் , மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார். மனைவியை  அடிமை போல் நடத்துவது, மனைவியின் தங்கையை அடைய முயற்சிப்பது என எதிர்மறை நாயகனுக்கான வேலையை சரியாக செய்திருக்கிறார். மனைவியின் தங்கையை பெண் கேட்டு மாமனாரிடம் பேசும் இடத்தில் மிரட்டாமல் கவர்கிறார்.

கணவனுக்கு பயந்து நடுங்கும் கதாபாத்திரத்தில் அஸ்வினி ! இவருடைய முகம் அனுதாபத்தை ஏற்படுத்துவது நம்மால் தவிர்க்க முடியவில்லை !  முதல் படம் என்றால் நம்ப முடியவில்லை !

முக்கியமான ஒன்று! தாயை கொடுமைபடுத்தும் தந்தையின் முன் வீர வசனம் பேசுவது , சபதம் போடுவது, உழைத்து முன்னேறுவது  என எந்த மசாலா வாசனையும் இல்லாமல் இந்த படத்தில் குழந்தைகளை குழந்தைகளாகவே வலம் வர விட்டிருப்பதற்காக இயக்குனருக்கு  தனியாக  சபாஷ் போடலாம் ! மேலும்  விஜயனின் மாமனாராக வரும் சாருஹாசனை முற்போக்கு சிந்தனைவாதியாக காட்டியிருப்பது கூடுதல் பலம் ! 

" பஞ்சாயத்தில் மனுஷங்கதான் வர்றாங்க ! பரவாயில்லை பஞ்சாயத்தை கூட்டுங்க " என அவர் சொல்லும்போது  தேர்ந்த நடிகரின்  முதிர்ச்சி !


மேலும் சில கதாபத்திரங்கள் நம்மை ஈர்க்கின்றன !  சுகாதார அதிகாரியாக வரும் சரத் பாபு , ஆசிரியர் என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளி படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக நாவிதர்  அஸ்வினி இறக்கும் பொது பேசும் வசனம்  " தம்பிக்கு முடி எடுக்கணும்னு சொல்லும் போதெல்லாம் , நேரம் வரட்டும்,நேரம் வரட்டும்னு சொல்வாங்களே!அந்த நேரம் இப்படியா வரணும்!" என கூறும்போது நம்மையும் அறியாமல் கண்கள் கலங்க செய்து விடுகிறது.

இறுதியில், குழந்தைகள் தனியாய் ஆற்றின் ஓரத்தில்  உதிரிப்பூக்களாக நடந்து செல்லும் காட்சி  , நம் மனதை விட்டு உதிர மறுக்கிறது !

தெளிவான கதை , நேர்த்தியான திரைக்கதை , எளிமையான  வசனங்கள்  என படம் மிக  மிக அருமை ! பாடல்களும் , பின்னணி இசையும் இளையராஜவிற்கு உரிய முத்திரை! இயக்குனர்  மகேந்திரன்  தமிழ் சினிமாவின் வரலாற்றின் தவிர்க்க முடியாத இயக்குனர்.


நன்றியுடன் 
இரா.மாடசாமி  

[மேலும் படிக்க>>>]

Monday 27 August 2012

வரலாற்றில் இடம் பிடித்த தமிழ் பதிவர் சந்திப்பு!

- 15 comments
வணக்கம் நண்பர்களே ,
                               பதிவர் மாநாடு   
 
பதிவர் சந்திப்பு பற்றிய சில  குறிப்புகளை எடுத்துக்கொண்டு  காலையில்  கிளம்பிகொண்டுருக்கையில்  என் மனைவி " எங்கே போறீங்க?" என கேட்டார். இணைய  எழுத்தாளர்கள்  சந்திப்பிற்கு  என்றேன். சரிங்க ! நீங்க ஏன் போறீங்க? அதுக்கு எழுத்தாளர்கள் தானே போகணும்  என்றார் . இந்த அவமானம் தேவயா ? என வடிவேல் போல மனதுக்குள் கேட்டுக்கொண்டு , பின்  சுதாரித்து கொண்டு  இதுதான் சந்தர்ப்பம் என்று கல்யாண பரிசு தங்கவேல் மாதிரி  பீலாவிட்டேன் ! (உங்களுக்கு  அந்த படத்தில் வரும் வைரவன் எழுத்தாளர்  ஜோக்  நினைவில் இருக்கும் என நினைக்கிறேன் )நான் பெரிய எழுத்தாளன் போலவும்,பிரபல எழுத்தாளர்கள் எனக்கு நண்பர்கள் எனவும் இஷ்ட்டத்துக்கு அள்ளி விட்டேன் !  உடனேயே  நானும் வருகிறேன் என அடம் பிடித்தார் ! அதற்கு அனுமதி கிடையாது என்றும்  அங்கு எழுத்தாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் கூறி  சமாளித்து  பேருந்து நிலையம் வந்தேன். ஞாயிற்று கிழமை  என்பதால் கூட்டம் அதிகம் இல்லை !  மண்டபம் வந்தடைந்தேன் !  நிறைய பேர் வந்திருந்தாலும் புதிய பதிவரான எனக்கு பரிச்சயம் இல்லா முகங்களாகவே இருந்தது!  

சிறிது நேரம் கழித்து , வீடு  திரும்பல் திரு.மோகன் குமாரிடம்  நானாகவே அறிமுகம் செய்து கொண்து இருக்கையில் அமர்ந்தேன். மூத்த பதிவர்களை சந்தித்தது மனதிற்கு  மகிழ்ச்சியாக இருந்தது ! பெண் பதிவர்கள் வந்தது  விழாவிற்கு கூடுதல் பலம் ! பின் விழா தொடங்கி அனைவரும் சுய அறிமுகம் செய்து கொண்டனர் ! நானும் தான் ! மதியம் வரை தனிமையிலே இருந்தேன்!  மதிய உணவு இடைவெளிக்கு  பின் சில  நண்பர்கள்  அறிமுகமானார்கள் ஒருவர்  வேல்வெற்றி    இன்னொருவர்  ஈகைவேந்தன்   சமூகத்தின் மீதும் தமிழ் மீதும்  மிகுந்த அக்கறை கொண்டவர்கள் என அவர்கள் பேசும் பேச்சிலேயே தெரிந்தது.  திரு.பட்டுக்கோட்டை பிரபாகர்  வந்து மூத்த பதிவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தது நெகிழ செய்தது .  பின் கவிதை வெளியீட்டு விழாவும்  நடைபெற்றது. விழாவிற்கு புதிய தலைமுறை செய்தி பிரிவிலிருந்து வந்தது புருவத்தை மேலே உயர்த்தியது!மண்டபம் முழுவதும்  கேமராக்களின் மின்னல் ஒளி  மின்னி கொண்டிருந்தது!எனக்கு புகைப்படம்  எடுக்கும்  எண்ணம்  இல்லாததால் கம் மென்று இருந்து விட்டேன்!பின்னர், வீட்டிலிருந்து அவசர அழைப்பு வர, கிளம்பி விட்டேன். வழி நெடுகிலும்  ஒரே சிந்தனை! அது என்னவென்றால், கோவில் படத்தில் வரும் வடிவேல் போல காசியப்பன் பாத்திரகடைக்கு சென்று ஒரு பரிசும் , பின்னர் ஒரு  சின்ன  மாலையும்  வாங்கி செல்ல வேண்டும் மனைவியை ஏமாற்ற! 


  இந்த நாள் வரலாற்றில் இடம் பெரும் நாளாக  போவது வீட்டிற்கு வந்த பின்தான் தெரிந்தது. ஆம் ! நமது இந்திய இளைஞர் கிரிக்கெட் அணியினர் உலக  கோப்பையை  வென்று  உற்சாகமளித்தனர். இப்போது   உங்களுக்கு புரிந்திருக்கும் தலைப்பின் பொருள் ! 

இந்த பதிவு மொக்கையாக இருந்தாலும்  மன நிறைவுக்காக எழுதியது! 



நன்றியுடன் ,

இரா.மாடசாமி. 

  



[மேலும் படிக்க>>>]

Monday 20 August 2012

அரசியல் தலைவர்களுக்கு பிடித்த திரைப்படங்கள்!

- 4 comments

வணக்கம் நண்பர்களே,
                     சென்ற வார இடுகையில்  சுஜாதா - தொடர் பதிவு  மிகுந்த வரவேற்ப்பை பெற்றது மிக்க மகிழ்ச்சி, ஓட்டு போட்டு கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!

[மேலும் படிக்க>>>]

Tuesday 14 August 2012

எது சுதந்திரம்?

- 2 comments
வணக்கம் நண்பர்களே! 
                                              அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ! சுதந்திர தினத்தை ஒட்டி  இந்த பதிவு வெளி வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது! 

[மேலும் படிக்க>>>]

Monday 13 August 2012

சுஜாதா - தொடர் பதிவு-3

- 6 comments
வணக்கம் நண்பர்களே!
                                                   
திரு.சுஜாதா அவர்களை  பற்றிய  முந்தைய பதிவை படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்  .

சுஜாதா - தொடர் பதிவு -1

சுஜாதா - தொடர் பதிவு - 2

 
 "Electronic voting machine ஐ  எங்கள் குழு கண்டுபிடித்து அதை செயல் படுத்த முனைந்த சமயம் நிறைய விமர்சனங்கள் வந்தவண்ணம் இருந்தது. அது என்னவென்றால் ,  முன்னேற்ற நாடான அமெரிக்கா,ஜப்பான் போன்ற நாடுகளிலேயே இந்த voting machine முறை பயன்படுத்தவில்லை ! நாம் மட்டும் ஏன் பயன்படுத்த வேண்டும்?! 

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை! அனைத்து  Electronic கண்டுபிடிப்புகளும் ஐரோப்பிய மேலை நாடுகள் தான்  கண்டுபிடிக்க வேண்டுமா? நம்மால் முடியாதா? ஏன் இந்த தாழ்வு மனப்பான்மை நம்மிடம்? "
                                                                                          -திரு.சுஜாதா (கற்றதும் பெற்றதும்)


உண்மை ! நம் நாட்டில் இந்த தாழ்வு மனப்பான்மை நம் அரசியல்வாதிகளிடையே மட்டுமின்றி நம்மிடமும் ஒளிந்து கொண்டு இருக்கிறது !அதுதான் நம்மை முன்னேற விடாமல் பின்னோக்கி இழுத்து செல்கிறது .

[மேலும் படிக்க>>>]

Monday 6 August 2012

கவிதையா! நகைச்சுவையா !!நீங்களே சொல்லுங்க !!!

- 0 comments
வணக்கம் நண்பர்களே ,
                                                 சென்ற வாரம் முழுவதும் கட்டுரையாகவும் , சினிமாவாகவும் எழுதி விட்டேன். ஆகையால் இந்த வாரம் நகைச்சுவை எழுதலாமா அல்லது கவிதை  எழுதலாமா என யோசித்தேன். பின்னர் இரண்டும் சேர்ந்த கலவையாக  எழுதினால் என்ன  என்று யோசித்ததன் விளைவே கீழே உள்ள தொகுப்பு ! பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை போடவும்.அது  எனக்கு இன்னும் ஊக்கத்தை  தரும் !


இதன் முந்தைய அனைத்து பதிவிற்கும் இங்கே  சொடுக்கவும் 


[மேலும் படிக்க>>>]

Friday 3 August 2012

நான் ரசித்த தமிழ் சினிமா! ஒரு பார்வை!!-2

- 1 comments
வணக்கம் நண்பர்களே,

                                               சென்ற இடுகையில் நான் எழுதிய   நான் ரசித்த தமிழ் சினிமா ! ஒரு பார்வை !!!!  அதிக வாசகர்களால் பார்க்கப்பட்ட இடுகையாக  என்னுடைய  VIEW STATUS காட்டியது. மேலும்  என்னுடைய இடுகைகளிலேயே அதிக பட்ச ஓட்டுக்கள் விழுந்ததும் இந்த இடுகைக்குதான். வாசித்த அனைத்து நண்பர்களுக்கும், ஓட்டுபோட்டு, பரிந்துரைத்த நண்பர்களுக்கும் மிக்க நன்றி. ஒரு பதிவர்  என்கிற முறையில்  மகிழ்ச்சியுடனும் , எனக்கு நீங்கள் அளித்த  அங்கீகாரமாகவும்  எடுத்துகொள்கிறேன்.

இந்த வரிசையில் அடுத்து நாம் பார்க்க போகும் படம் ரத்தக்கண்ணீர். 1954ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் திரு.M .R .இராதா , திரு S .S . இராஜேந்திரன் .திரு.சந்திரபாபு , திருமதி. M .N ராஜம்  போன்றவர்கள் நடித்திருப்பார்கள். இயக்கம் திரு. கிருஷ்ணன் & பஞ்சு, இசை-சிதம்பரம் திரு.ஜெயராமன் .கதை -திருவாரூர் திரு.தங்க ராசு.



கதையின் கரு:
                             பன்னாட்டு மோகம் கொண்ட ஒருவன் , தாயையும்  மனைவியையும்  மதிக்காமல் , தீய மற்றும் கூடாத சகவாசங்களால்  எவ்வாறு  சீரழிகிறான் என்பதுதான் படத்தில் oneline .


கதை சுருக்கம் :
மேல்நாட்டில் படித்து ஊர் திரும்பும் M .R .இராதாவிற்கு  அதே ஊரில் நாட்டியம் ஆடும் ஒரு நாட்டியக்கரியுடன் தொடர்பு.அடிக்கடி அங்கு போய்வருவது, குடிப்பது, கூத்தாடுவது என ஆனந்தமாக வாழ்கையை கழிக்கிறார். இந்த நேரத்தில் இவருடைய அம்மா இவருக்கு கல்யாணம் செய்வதற்கு இவரிடம் கேட்கிறார். இவரும் விருப்பமில்லாமல் மணக்கிறார்.இவருடைய ரசனையும் ,நடவடிக்கையும் கல்யாணம் பண்ணிய பெண்ணுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.ரசனைக்கு இணங்காத மனைவியை கொடுமை படுத்துகிறார். இதற்கிடையில் , மாமனாரை அவமானபடுத்துவது,நண்பனையும் மனைவியையும் சந்தேகப்படுவது,  தாயின் சாவுக்கு கூட போகாமல்  நாட்டியக்காரியின் வீடே கதி என கிடப்பது என பாவங்களை அரங்கேற்றுவார். சிறிது நாளில், இவருக்கு வரக்கூடாத வியாதி வந்து நாட்டியக்காரி இவரை வீட்டை விட்டு துரத்துகிறார். தெருவுக்கு வரும் M .R .இராதா.வியாதி முற்றி முகம் அகோரமாக மாறி, நடக்க கூட முடியாமல் போகிறது. இந்த நிலையில் தன்  பழைய நண்பனையும் மனைவியையும் சந்தித்து அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கிறார்.இறுதியாக தனது வாழ்க்கை அனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டும் என,  தான் இப்போது எந்த நிலையில் உள்ளேனோ அந்த  நிலையிலேயே ஒரு சிலையை வைக்குமாறு தன் நண்பனிடம் வேண்டுகோள் விடுத்து இறந்து போகிறார்.  


M .R .இராதா, என்ன ஒரு அற்புதமான ஒரு நடிகர். நடிக வேள் என்ற பட்டம்  அத்தனை பொருத்தம் இந்த கலை அரசனுக்கு. ஒரு மேல் நாட்டு மோகம் கொண்ட இளைஞன் எவ்வாறு நடந்து கொள்வான் என்பதை தத்ரூபமாக நடித்திருப்பார். அந்த நடை, உடை, பாவனை, ஸ்டைல் என அந்த காலத்திலேய பின்னி எடுத்திருப்பார்.எனக்கு தெரிந்த வரையில் தமிழ் சினிமாவின் ஸ்டைலுக்கு முன்னோடி என்றால் அது MRR  மட்டுமே. படத்தில் இவர் பேசும் நக்கல் பேச்சும் , பகுத்தறிவு வசனமும் ரசிக்க வைக்கும். நான் ரசித்த வசனங்கள் கீழே !

தன்  அம்மாவிடம்,

MRR: எத்தனைவாட்டி சொல்றது உனக்கு!மோகன்னு கூப்பிடாதே என்று!
அம்மா: பின்ன எப்படிப்பா கூப்பிடுறது ?
MRR: (இங்கிலீஷ்)துரைன்னு கூப்பிடு !

MRR:  புடவை எல்லாம் கட்டிக்கிட்டு என் முன்னாலே வராதே ?
கவுன் போட்டுக்கோ !  foreign  ல அப்படித்தான் போட்டுக்குறாங்க

MRR: " கண்ட கழுத பயலுகளா எல்லாம் உள்ள விட்டுகிட்டு !  பாரு அவன குரோட்டன் செடிய பிச்சு போட்டுக்கிட்டு . யார் அவன்?
அம்மா: அவங்கல்லாம் நம்ம சொந்தக்காரங்கப்பா!

மாமனார்: சாந்தி முஹுர்த்தம் கல்யாணத்தன்னிக்கு தான் வைக்கணும், தவறி போச்சுனா  குரு , சந்திரன்  எல்லாம் போய்டும்
MRR:  நோ! நோ ! எனக்கு நிறைய appointment இருக்கு ! அந்த குரு , சந்திரன்   இவங்க ரெண்டு பேரையும் நாளைக்கு வரசொல்லுங்க!
மாமனார்: மாப்ளே,அதெல்லாம் கிரகங்கள் மாப்ளே, 
MRR:  Oh ! Planets !ஓகே carry on ! 10 மணிக்கு  டான்னு ஆரம்பிக்கணும் !

இன்னொரு காட்சியில்
மாமனார்:  எனக்கு கேட்க உரிமை இருக்கிறது ! நான் உங்க மாமனார்!
MRR : எந்த நாரா  இருந்தாலும் எனக்கு கவலை இல்லை!போ வெளியே !


இன்னும் சில,

சாலையோர கல்லில் தடுக்கி விழும்போது, " அடப்பாவிகளா  ! ரோடு போட ஆறுமாசம் ஆவுது ! ஆனா கல்ல மட்டும் இன்னைக்கே கொட்டிவைக்கிறாங்க ! (அப்பவே நம்ம அரசியல் வாதிகளின் நிலைமையை குத்தி  காட்டியிருப்பார்)

SSR  : நாங்க ஜீவ காருண்ய கட்சியில இருக்கோம் ! உயிர்களை கொல்ல மாட்டோம் !
MRR : மூட்டை பூச்சி கடிச்சா என்னடா செய்வீங்க யப்பா  ?

அந்த காலத்திலேயே  பகுத்தறிவு, மறுமணம், பெண்ணாசையினால்  வரும்கேடு  என ஒரு சமுதாயத்திற்கு தேவையான் சமூக விழிப்புணர்வுள்ள   திரைப்படமாகவே இதை பார்க்கிறேன்.இது போன்ற படங்களை எல்லாம் இப்போது டிவி யில் போடுவதில்லை. இதன் Cd யை வாங்க நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும்!நீங்களும் ஒரு முறை பாருங்கள் !
பதிவை படித்து விட்டு பிடித்திருந்தால் comment  போடவும் .

பட உதவி : Google images

நன்றியுடன்
இரா.மாடசாமி

[மேலும் படிக்க>>>]

Wednesday 1 August 2012

அறநெறிகளை பின்பற்றுகிறதா பள்ளிக்கூடங்கள்?

- 0 comments
வணக்கம் நண்பர்களே,


இந்த வார பதிவு எழுதும் முன், அண்மையில்  பள்ளி வாகனத்தில் இருந்து , கீழே விழுந்து இறந்த குழந்தையின்ஆன்மா சாந்தி பெற வேண்டியும் அந்த  பெற்றோற்க்கு ஆழ்ந்த இரங்கலையும்  தெரிவித்து கொள்கிறேன்.

[மேலும் படிக்க>>>]
 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger