Tuesday 2 April 2013

காதல் கிறுக்கல்!!!!

வணக்கம் நண்பர்களே !
                                                  இந்த பதிவில்  எனது கிறுக்கல் ஒன்றினை பகிர்கிறேன் ! என்ன செய்வது ! காலத்தின் கட்டாயம்  இதை எல்லாம் படித்து தொலைக்கவேண்டுமே என நீங்கள் மனதுக்குள் முனுமுனுப்பது எனக்கு  புரிகிறது ! வேறு வழியே இல்லை  நீங்கள் இதை படித்தே ஆகவேண்டும் ! இந்த கிறுக்கலை தமிழில் ஏதோ சொல்வார்களே ! ஆங் ! சிலேடை ! அதான் ! அதுமாதிரி முயற்சி பண்ணியிருக்கிறேன் ! பிடித்திருந்தால் கருத்தளிக்கவும் ! இன்னொரு வைரமுத்து வருவதை தடுக்காதீர்கள் ! சூ ! இந்த காக்கா வேற !



கவனிப்பு !

கோவிலில் கடவுளை

கவனிக்க மறந்த நான்

உன்னையே கவனித்தேன் !என்பதை

நீ கவனித்தாய் ! அதை நானும்  கவனித்தேன் !


இருந்தும்  நான் கவனித்ததை கவனித்துவிட்டு

நீ   கவனிக்காதது போல காட்டிகொண்டதையும்,

யாரேனும் உன்னை கவனிக்கிறார்களா ? என

நன்கு கவனித்துவிட்டு,மீண்டும்

கவனமாக நீ என்னை கவனிப்பதையும்

நான் கவனித்தேன் !

ஒரு பெண்ணின் கவனத்தை பெறுவது என்பது

எவ்வளவு பெரிய விடயம் என

இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும் !

நம் இருவர் கவனிப்பையும் தற்செயலாக

கோவிலுக்குள் வந்த என் தந்தை

கவனித்துவிட ! அப்புறம் என்ன !!!

வீட்டில்  எனக்கு  செம கவனிப்புதான் !!!!
 *******************************************************************************
அன்பே ! உன்னை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை !

என்று சொல்லமாட்டேன் ! ஏன் என்றால் !

அதுவும் வார்த்தைகளாவதால் !

*********************************************************************************
 சாலையில் இருவரும்

எதிரெதிர் திசையில் கடந்து செல்கிறோம் !

நான் ! திரும்ப திரும்ப  திரும்பி பார்க்கிறேன் !

நீ என்னை திரும்பி பார்ப்பாய் என்று !

ஆனாலும் நீ திரும்பாமல் போகிறாய் !

ஒருவேளை நீ திரும்பி பார்ப்பதை

நான் திரும்பி பார்த்துவிடுவேன் என நினைத்தாயோ !

திரும்ப எப்போது இதுபோன்று சந்தர்ப்பம் வரும்

என்று திரும்பியபடியே வீடு வந்தேன் !
**********************************************************************************

உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டாய் !

எனக்கு உன்னை பிடிக்கும் என்றேன் !

பிறகு ? என தொடங்கினாய் !

உன் புன்னகை பிடிக்கும் என்றேன்!

மெல்லிய புன்னகையோடு ! அப்புறம் என அழகாய் கேட்டாய் !

உன்னை கரம் பிடிக்க பிடிக்கும் என்றேன்  !

அடுத்து என தொடர்ந்தாய் !

என் வேர்வையில் உன்னை நனைக்க பிடிக்கும் !

 நாணத்துடன், கண்ணை மூடிக்கொண்டு ! அப்புறம்  என்றாய் !

உன் அம்மாவை பாட்டியாக  பார்க்க பிடிக்கும் என்றேன் !

சற்று நிருத்திவிட்டு  ! உனக்கு என்ன பிடிக்கும் என நான் கேட்க

நிறுத்தி சொன்னாய்!

எனக்கு உன் தீராக்காதல் பிடிக்கும் என்று !






நன்றியுடன் !

இரா.மாடசாமி



Related Posts Plugin for WordPress, Blogger...

11 comments :

  1. என்ன இப்படி சொல்லிட்டீங்க... நல்லாத்தான் இருக்கு... தொடர வாழ்த்துக்கள்...

    /// அதுவும் வார்த்தைகளாவதால் ! ///

    மிகவும் பிடித்தது...

    ReplyDelete
  2. உங்களின் பாராட்டுக்கு நன்றி நண்பரே ! தொடர்கிறேன் உங்களின் ஆசியோடு !

    ReplyDelete
  3. அழகிய கவிதைகள்

    ReplyDelete
  4. என்ன பிடிக்கும் கவிதையை சற்று மாற்றி எனது தளத்தின் கவிதை உலா வில் இரவு 9 மணியளவில் வெளியிடுகிறேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே ! இது போன்ற அங்கீகாரம் எனக்கு மேலும் எழுத தூண்டுகிறது !

      Delete
  5. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
    நாடி கவிதைகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே ! தளத்திற்கு தொடர்ந்து வருகை தரவும் !

      Delete
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_3.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே ! பார்த்து மகிழ்ந்தேன் !

      Delete
  7. அருமையான கவிதைகள்... அதிலும் கவனத்தை கவனமாக வரிகளுள் புகுத்தி அழகாக வடிவமைத்து கவி படைத்து விட்டீர்கள் அருமை..

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி தோழி பிரஷா அவர்களே ! தளத்திற்கு தொடர்ந்து வருகை தரவும் !

      Delete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger