Thursday 12 April 2012

என்னைப்பற்றி

- 0 comments
அனைவருக்கம் இனிய வணக்கம்,
        எனது பெயர் இரா.மாடசாமி . விருது நகர் மாவட்டம்  இராஜபாளையத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்தவன்.இயந்திரவியல் பட்டயம் முடித்திருக்கின்றேன்.ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக  பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.

புத்தக கண்காட்சிக்கு சென்று ஒரு நாள் திரு. சுஜாதா அவர்களின் ஏன்? எதற்கு? எப்படி? என்ற புத்தகத்தை வாங்கி படித்தேன் ! அன்று முதல்  அவரின் தீவிர பக்தனாகிவிட்டேன். அவருடைய அனைத்து புத்தகங்களையும் படித்து  வருகிறேன் . இப்போதும் கூட இந்த தளமானது  திரு.சுஜாதா அவர்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு , அவரை போல் அல்லாவிட்டாலும் ஏதாவது எழுத வேண்டும் என ஆர்வ மிகுதியால் தொடங்கப்பட்டது.தொடர்ந்து   எனது கற்பனைகளுக்கு உயிரூட்டுவதற்க்காக பயன்படுத்தி வருகிறேன்.பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும்போதே  நகைச்சுவையாக பேசுவதில் ஆர்வம் அதிகம். அதை வெளிக்கொணர இந்த தளம் எனக்கு ஒரு மேடையாக  அமைந்துள்ளது. ஆரம்பம் முதல் இந்த தளத்தில் நகைச்சுவைக்கு பிரதான இடமளித்து வருகிறேன் . அவ்வப்போது  கட்டுரைகளும் எழுதுகிறேன். தளத்திற்கு தொடர்ந்து வருகை புரிந்து ஊக்கபடுத்திகொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றிகள்  பல !
 
தொடர்புக்கு: madasamy81@gmail.com

இப்படிக்கு
இரா .மாடசாமி



[மேலும் படிக்க>>>]
 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger