Saturday 13 April 2013

வானவில்லின் 50 வது பதிவு !எமனுக்கு டார்கெட்டு !

- 10 comments
  வணக்கம் நண்பர்களே !
                                                  அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இது வானவில்லின்  50 வது பதிவு! மேலும்  வானவில் நேற்றுடன் ஒரு வருடத்தினை நிறைவு செய்தது .இதுவரை தொடர்ந்து தளத்திற்கு வந்து கருத்தளித்து ஊக்கமளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வானவில் தனது இதய பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறது!  என்னுடைய அனைத்து பதிவுகளுக்கும்   தவறாது  கருத்தளிக்கும் நண்பர் திரு .திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நண்பர் திரு.ஜெயதேவ் அவர்களுக்கும் நன்றிகள் பல.

[மேலும் படிக்க>>>]

Wednesday 3 April 2013

பரதேசி படத்தில் ஏன் இல்லை இளையராஜா ?

- 6 comments
வணக்கம் நண்பர்களே !
  
 சமீபத்தில் வெளிவந்திருக்கும் பரதேசி படம் மக்களிடையே  நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதாக பத்திரிக்கை வழியாகவும்  பதிவுகளின் வழியாகவும் படித்து தெரிந்து கொண்டேன்.ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருதை தட்டி சென்றது மற்றுமொரு சிறப்பம்சம். தொடர்ந்து இயல்பான,மற்றும் தரமான படங்களை கொடுத்து கொண்டிருக்கும் திரு.பாலா அவர்களுக்கு இந்த விருது ஒன்றும் புதிதல்ல! இந்த படமும் அவருக்கு புதிதல்ல!வாழ்த்துக்கள் பாலாசார்!தமிழ் சினிமாவை வாழவைத்துக்கொண்டிருக்கும் சிலரில் நீங்களும் ஒருவர்!

இந்த பதிவு விமர்சன பதிவு  அல்ல.  இந்த திரைப்படத்தில்  இளையராஜா ஏன் பங்கேற்க்கவில்லை? என என் மனதில் ஒரு சிறிய சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது .அதற்க்கு விடை காணும் முடிவாக சில கருத்துக்களை இங்கே உங்களிடம்  முன் மொழிகின்றேன் . இது எனது தனிப்பட்ட கருத்து  மட்டுமே! இதை ஏற்றுக்கொள்ளவேண்டும்  என எந்த நிர்பந்தமும் கிடையாது !


இதுவரை வெளிவந்த பாலா படங்களில் மிகப்பெரிய வெற்றி என கொண்டாடப்படும் சேது மற்றும் பிதாமகன் இரண்டிலுமே இசை  இசைஞானியே ! அப்படி இருக்க ஒரு உழைப்பு சுரண்டலும் , அடிமைகளின்  வாழ்க்கை வரலாற்றையும்  அடிப்படையாக கொண்ட, கதைக்களம் வலுவாக உள்ள  இந்த படத்திற்கு பாலா ஏன் இளையராஜாவை அணுகவில்லை ! அல்லது அணுகி நிராகரிக்கப்பட்டதா? அல்லது  வேலைப்பளுவினால (இளையராஜாவிற்கு ) ஒத்துக்கொள்ளமுடியாமல் போனதா என்பதை பாலா  மட்டுமே சொல்ல முடியும்.

 எத்தனையோ புதிய இயக்குனர்கள் அதுநாள்வரை ஒன்றாக வேலை செய்த இசையமைப்பாளர்களிடம்  இருந்து பிரிந்து வந்து இசைஞானியின் இசைமட்டுமே அந்த படத்திற்கு சரியாக இருக்கும் என முடிவில் உறுதியாக இருந்து இசைஞானியிடம் பணியாற்றியிருக்கிறார்கள்(மிஷ்கின்,கௌதம் மேனன்). அப்படியிருக்க இது நாள்வரை இசைஞானியிடமும் ,யுவனிடமும் இணைந்து பணியாற்றிய பாலாவின்  இந்த முடிவுக்கு என்ன காரணம் ?

* சற்று ஆராய்ந்து பார்த்தால் ,இளையராஜா எப்படி அவருடைய துறையில் வல்லவரோ ! அதே நிகருக்கு  வைரமுத்துவும் அவருடைய துறையில் வல்லவர் என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும் . 
 

*  இந்த படத்தில்  எந்த அளவுக்கு இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டுமோ  அதே அளவுக்கு கருத்தாழம் மிக்க  பாடல்கள் இடம்பெற வேண்டும்  என பாலா கருதியிருக்கலாம்.அதை கருத்தில் கொண்டு வைரமுத்துவுடன் பணியாற்ற விருப்பபட்டிருக்கலாம்!(1980 கால கட்டத்தில் இளையாராஜாவின் பாடல்கள்  வெற்றிபெற வைரமுத்துவின் வைர வரிகளும் முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது !)

* மேலும் இதுபோன்ற கதை வலுவுள்ள படத்திற்கு வேறு பாடலாசிரியரை அணுகினாலும் வைரமுத்து பாடல்களை போல உயிரோட்டமாக இருக்குமா என்பது சந்தேகமே ! கதைக்களம் கிராமத்து பின்புலத்துடன்  அமைந்திருப்பதால் பாடல்களும் கிராமிய வாசனையுடனும் வார்த்தைகளுடனும் அமைய வேண்டும் என அனைத்து பாடல்களையும் வைரமுத்துவுக்கே எழுத  வாய்ப்பளித்திருக்கிறார்.தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் இவர் எழுதிய "கள்ளி காட்டில் பிறந்த தாயே " என்ற பாடல் சில வருடங்களுக்கு  முன் தேசிய விருதை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா,வைரமுத்துவுடன் பணியாற்ற எப்படியும் சம்மதிக்க மாட்டார்.அதே நேரம் நல்ல இசை மற்றும் பாடல்களும் வேண்டும்.  இந்நேரத்தில், சமீபத்தில் வெளியான தெய்வத்திருமகள் ,மதராசபட்டிணம் ஆகிய படங்களில் பாடல்கள் மட்டுமல்லாது பின்னணியிலும் அசத்தியிருப்பார் ஜி.வி.அதனால் இதையும் கவனத்தில் கொண்ட பாலா, இவை அனைத்தையும் அலசி ஆராய்ந்து இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்  .


MSV -கண்ணதாசன் கூட்டணிக்கு பிறகு ,தமிழ் திரை உலகம் அதிகம்  ரசித்தது இசைஞானி -வைரமுத்து கூட்டணி தான் . இந்த கூட்டணி முறிந்ததால் இசை ரசிகர்கள்  இழந்த பாடல்கள் அதிகம் .இதை கருத்தில் கொண்டு மீண்டும் அவர்கள் இணைய வேண்டும் அன்பது எனது விருப்பம் மட்டும் அல்ல  ஒட்டுமொத்த இசை ரசிகர்களின் விருப்பம் .


நன்றியுடன்

இரா.மாடசாமி




  
[மேலும் படிக்க>>>]

Tuesday 2 April 2013

காதல் கிறுக்கல்!!!!

- 11 comments
வணக்கம் நண்பர்களே !
                                                  இந்த பதிவில்  எனது கிறுக்கல் ஒன்றினை பகிர்கிறேன் ! என்ன செய்வது ! காலத்தின் கட்டாயம்  இதை எல்லாம் படித்து தொலைக்கவேண்டுமே என நீங்கள் மனதுக்குள் முனுமுனுப்பது எனக்கு  புரிகிறது ! வேறு வழியே இல்லை  நீங்கள் இதை படித்தே ஆகவேண்டும் ! இந்த கிறுக்கலை தமிழில் ஏதோ சொல்வார்களே ! ஆங் ! சிலேடை ! அதான் ! அதுமாதிரி முயற்சி பண்ணியிருக்கிறேன் ! பிடித்திருந்தால் கருத்தளிக்கவும் ! இன்னொரு வைரமுத்து வருவதை தடுக்காதீர்கள் ! சூ ! இந்த காக்கா வேற !



கவனிப்பு !

கோவிலில் கடவுளை

கவனிக்க மறந்த நான்

உன்னையே கவனித்தேன் !என்பதை

நீ கவனித்தாய் ! அதை நானும்  கவனித்தேன் !


இருந்தும்  நான் கவனித்ததை கவனித்துவிட்டு

நீ   கவனிக்காதது போல காட்டிகொண்டதையும்,

யாரேனும் உன்னை கவனிக்கிறார்களா ? என

நன்கு கவனித்துவிட்டு,மீண்டும்

கவனமாக நீ என்னை கவனிப்பதையும்

நான் கவனித்தேன் !

ஒரு பெண்ணின் கவனத்தை பெறுவது என்பது

எவ்வளவு பெரிய விடயம் என

இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும் !

நம் இருவர் கவனிப்பையும் தற்செயலாக

கோவிலுக்குள் வந்த என் தந்தை

கவனித்துவிட ! அப்புறம் என்ன !!!

வீட்டில்  எனக்கு  செம கவனிப்புதான் !!!!
 *******************************************************************************
அன்பே ! உன்னை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை !

என்று சொல்லமாட்டேன் ! ஏன் என்றால் !

அதுவும் வார்த்தைகளாவதால் !

*********************************************************************************
 சாலையில் இருவரும்

எதிரெதிர் திசையில் கடந்து செல்கிறோம் !

நான் ! திரும்ப திரும்ப  திரும்பி பார்க்கிறேன் !

நீ என்னை திரும்பி பார்ப்பாய் என்று !

ஆனாலும் நீ திரும்பாமல் போகிறாய் !

ஒருவேளை நீ திரும்பி பார்ப்பதை

நான் திரும்பி பார்த்துவிடுவேன் என நினைத்தாயோ !

திரும்ப எப்போது இதுபோன்று சந்தர்ப்பம் வரும்

என்று திரும்பியபடியே வீடு வந்தேன் !
**********************************************************************************

உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டாய் !

எனக்கு உன்னை பிடிக்கும் என்றேன் !

பிறகு ? என தொடங்கினாய் !

உன் புன்னகை பிடிக்கும் என்றேன்!

மெல்லிய புன்னகையோடு ! அப்புறம் என அழகாய் கேட்டாய் !

உன்னை கரம் பிடிக்க பிடிக்கும் என்றேன்  !

அடுத்து என தொடர்ந்தாய் !

என் வேர்வையில் உன்னை நனைக்க பிடிக்கும் !

 நாணத்துடன், கண்ணை மூடிக்கொண்டு ! அப்புறம்  என்றாய் !

உன் அம்மாவை பாட்டியாக  பார்க்க பிடிக்கும் என்றேன் !

சற்று நிருத்திவிட்டு  ! உனக்கு என்ன பிடிக்கும் என நான் கேட்க

நிறுத்தி சொன்னாய்!

எனக்கு உன் தீராக்காதல் பிடிக்கும் என்று !






நன்றியுடன் !

இரா.மாடசாமி



[மேலும் படிக்க>>>]
 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger