Monday 19 November 2012

பின்பற்றவேண்டிய ஆரோக்கிய அட்டவணை !

- 7 comments

வணக்கம் நண்பர்களே ,
                                               இதுவரை நாம் ஆரோக்கியபழக்கங்கள், தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி பார்த்தோம் . அவற்றை அட்டவணைப்படுத்தி உங்களுக்கு பயனுள்ளவாறு போட்டிருக்கிறேன் .படித்து பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள் .

[மேலும் படிக்க>>>]

Wednesday 7 November 2012

தவிர்க்கப்படவேண்டிய நோய்த்தன்மை உடைய 10 உணவுகள் -பகுதி -2

- 16 comments
 வணக்கம் நண்பர்களே !
                                                  தவிர்க்கப்படவேண்டிய நோய்த்தன்மை  உடைய 10 உணவுகளில் , சென்ற பதிவில் ஐந்தை பார்த்தோம் . இந்த பதிவில் மீதி ஐந்தை பார்ப்போம் .

[மேலும் படிக்க>>>]

Friday 2 November 2012

விருமாண்டி ஸ்டைலில் ஒரு சிறுகதை !

- 5 comments

                                

                                  

                                              அவசர அழைப்பு !!! 


சாப்பிட்டு கொண்டிருந்த தனசேகரை ஆடி போனா ஆவணி பாட்டு  அலைபேசியில் அழைத்தது.  அலைபேசி திரையில்  யாரென பார்த்தான் .   சந்திரன் அழைக்கிறார் என்று காண்பித்தது . வாயில் பரோட்டாவை தினித்தவாறே இயக்கினான் .



தனசேகர் : சொல்லு மச்சி !

சந்திரன் : ________________

தனசேகர் : அய்யயோ ! எப்போ ? 

சந்திரன் : ________________

தனசேகர்: பொருளு எடுத்துட்டு போனியா ?

சந்திரன் : _________________

தனசேகர்: போடங்கோ! எத்தனைவாட்டி சொல்றேன் பொருள்  இருக்ககான்னு செக் பண்ணிட்டுப்போண்ணு ! இப்படி தனியா போய்  மாட்டிகிட்டியேடா !

சந்திரன் :__________________

 தனசேகர்: எத்தனை பேரு ?

 சந்திரன்:___________________

தனசேகர்: சரி இப்போ  எங்க இருக்க நீ ?

சந்திரன் : __________________

தனசேகர் : காஞ்சிபுரம் கவர்மென்ட் ஹாஸ்பிட்டலா ? சரி இரு வரேன் !

பாதி உரையாடலை  படித்து  முடித்ததும் பலபேருக்கும்  இந்த கதை கீழே உள்ளவாறு இருந்திருக்கும் என யூகித்திருக்கலாம் !


தனசேகர் : சொல்லு மச்சி !

சந்திரன் : ஆனந்து ,ஆள  வச்சு அடிச்சுட்டாண்டா !

தனசேகர் : அய்யயோ ! எப்போ ?

சந்திரன் : இப்போதான்டா

தனசேகர்: பொருளு எடுத்துட்டு போனியா ?

சந்திரன் : இல்லடா

தனசேகர்: போடங்கோ! எத்தனைவாட்டி சொல்றேன் பொருள்  இருக்ககான்னு செக் பண்ணிட்டுப்போண்ணு ! இப்படி தனியா போய்  மாட்டிகிட்டியேடா !

சந்திரன் : எதிர்பார்க்கலை மச்சி !

 தனசேகர்: எத்தனை பேரு ?

 சந்திரன்: நாலஞ்சுபேரு வந்தாங்கடா
 
தனசேகர்: சரி இப்போ  எங்க இருக்க நீ ?

சந்திரன் : காஞ்சிபுரம் கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் !

தனசேகர் :காஞ்சிபுரம் கவர்மென்ட் ஹாஸ்பிட்டலா ?சரி இரு வரேன் !


ஆனா நான் கதையை மேல உள்ளது மாதிரி நினைச்சு  எழுதலைங்க ! கொஞ்சம்  கீழே படிங்க!


தனசேகர் : சொல்லு மச்சி !

சந்திரன் : வண்டி பஞ்சர் ஆயிடுச்சு!

தனசேகர் : அய்யயோ ! எப்போ ?

சந்திரன் : இப்போதான்டா

தனசேகர்: பொருளு எடுத்துட்டு போனியா ?

சந்திரன் : லோக்கல் சவாரி அதான் ஜாக்கி  லிவரு எதுவும் எடுக்காம கேர்லெஸ்ஸா இருந்துட்டேன் !

தனசேகர்: போடங்கோ! எத்தனைவாட்டி சொல்றேன் பொருள்  இருக்ககான்னு செக் பண்ணிட்டுப்போண்ணு ! இப்படி தனியா போய்  மாட்டிகிட்டியேடா !

சந்திரன் : சரி மச்சி ! சும்மா உதார் உடாம குய்க்கா  கெளம்பி வா  ! கஸ்டமர் கார்லயே வெய்ட் பண்றாங்க !

 தனசேகர்: எத்தனை பேரு ?

 சந்திரன்: நாலு பெருசு ! ரெண்டு சிறுசு ! 

தனசேகர்: சரி இப்போ  எங்க இருக்க நீ ?

சந்திரன் : காஞ்சிபுரம் கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் பக்கத்துல !

தனசேகர் : காஞ்சிபுரம் கவர்மென்ட் ஹாஸ்பிட்டலா ? சரி இரு வரேன் !

நண்பர்களே ! விருமாண்டி ஸ்டைல்னு  சொன்னவுடனே அருவா கதைன்னு நெனச்சீங்களா ! அதான் இல்ல !அந்த படத்துல ஒரே கதையை ரெண்டு பெரும் வேற வேற மாதிரி சொல்லுவாங்க ! இங்க கதை வேற! வசனம் ஒன்னு !
 இந்த படைப்பு  உங்களுக்கு பிடித்திருக்கிறதா ! எனது  யோசனையில் தோன்றிய, நான் முதன்  முதலாக எழுதிய  இந்த  படைப்பை  உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்! பிடித்திருந்தால்  கருத்திடவும் .


நன்றியுடன் !
இரா. மாடசாமி 




[மேலும் படிக்க>>>]

Tuesday 30 October 2012

தவிர்க்கப்பட வேண்டிய நோய்த்தன்மை உடைய 10 உணவுகள் !!!

- 5 comments
வணக்கம்  நண்பர்களே ,
                                                 ஆரோக்கிய வாழ்க்கை என்பது நீங்கள் தேர்வு செய்வது .நமது ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவை சார்ந்திருக்கிறது . நம் சொந்த ஆரோக்கியமானது ஆழ்ந்த தாக்கம் உடையது . உணவு ,உயிர்ச்சத்து இவற்றின் அடிப்படடைக் கொள்கைகளை  புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கிய வாழ்வின் உச்ச சக்தியை பெறமுடியும் . ஒவ்வொரு நாளும் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய நம் உணவு பழக்கத்திலுள்ள நோய்த்தன்மை உள்ள உணவுகளை சிறிது கவனத்திற்கு கொண்டுவருவோம் .

[மேலும் படிக்க>>>]

Thursday 25 October 2012

ஆரோக்கிய பழக்கங்கள் தொடர்பதிவு -2

- 2 comments
வணக்கம் நண்பர்களே !
                                                  ஆரோக்கிய பழக்கங்கள் தொடர்பதிவு  அனைவருக்கும் மிகுந்த பயனளிக்கும் என நினைக்கிறேன் . இந்த பதிவில் அதையே தொடர்கிறேன் .

ஆரோக்கிய பழக்கங்கள் தொடர்பதிவு-1 படிக்க இங்கே கிளிக் செய்யவும் .


[மேலும் படிக்க>>>]

Friday 19 October 2012

கரகாட்டக்காரனை ரீமேக் செய்யும் கெளதம் மேனன் !!!!

- 6 comments
வணக்கம் நண்பர்களே !
                                                
 நம்ம (கி)ராமராஜன் அண்ணன்,  ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் படத்துல நடிக்கிறார் ! என்னங்க  Shocking ஆ  இருக்கா ! எனக்கும்தான்!  கீழ படிச்சு பாருங்க அப்படியே காமெடியாவும்  இருக்கும். ஒன்னும் இல்லைங்க அதாவது  கரகாட்டக்காரன்  படத்த கெளதம் ரீ மேக் பண்ணுனா எப்படி இருக்கும்னு ஒரு சிறு கற்பனை மனதில் தோன்றியது . ரெண்டே ரெண்டு சீன் தான் எழுதி இருக்கேன் . படிச்சுட்டு நல்லா இருந்தா சொல்லுங்க !

             
 காட்சி :ராமராஜன் முதன் முதலா கரகம் ஆடியதை கண்டு அவருக்கு   ஷண்முக சுந்தரம் மரியாதை செய்து வீட்டிற்கு காப்பி சாப்பிட அழைக்கும் காட்சி

 ச.சுந்தரம் :  Dear All,  Well performance  done by Mr. Muthaiyan ! இந்த மாலைய  உங்க எல்லார் சார்பிலையும் இத நான் அவருக்கு போடுறேன் ! தம்பி!  நல்லா ஆடுனீங்க  தம்பி  well done !
 I have not seen ever such a dance like this ! super  தம்பி ! வெளியூர் ஆட்டகாரன  உள்ளூர்  ஆட்டக்காரன் மதிக்குறதுதாங்க மரியாதை ! 

ராமராஜன் :  தேங்க்ஸ்

அவர் சென்ற உடன்  தர்மகர்த்தா சந்தான பாரதி  ராமரஜனுக்கு மரியாதையை செய்ய வருகிறார் .


சந்திர சேகர் : Sir  ! வாட் இஸ் திஸ் ! Shame Shame puppy shame !I didn't expect from you !

கனகா : uncle leave it !  He is always doing like this !

சந்தான பாரதி: you  two  people are making problem !get lost !

கனகா  (ராமராஜனை  பார்த்து ):Hey Man ! Can you  come for competition  with me ?

ராமராஜன்: competition எல்லாம் எனக்கு கமர்கட்டு சாப்புடுறமாதிரி ! எங்க வச்சுக்கலாம் ! எப்ப வச்சுக்கலாம்

கனகா : எங்க வேணாலும் ! எப்ப வேணாலும்

ராமராஜன் : அப்ப ready ங்குற !

கனகா: Yes ! what you told ,You're going to break my knee?  Let see !

 ------------------------------------------------------------------------------------------------------------------
விருந்து சாப்பிட போகும் காட்சி

 கௌண்டமணி : தம்பி ! ( ராம ராஜன் நெஞ்சில் கைவைத்து) இங்க என்ன சொல்லுது ! காமாட்சி ! காமாட்சி னு சொல்லுதா ?

ராமராஜன் : ஆமாண்ணே ! அவ கண்ணு வழியா என்ன பார்க்கணும் போல இருக்கு !

ச.சுந்தரம் : அடேடே! வாங்க தம்பி ! என்ன அங்கேயே நின்னுடீங்க ! உள்ள வாங்க !

உள்ளே வந்தபின்

ச. சுந்தரம் : தம்பி ! have some coffee, tea, snacks !


ராமராஜன்: no thanks !

 கௌண்டமணி: தம்பி அதெல்லாம் சாபிடுறது இல்ல ! நீங்க  எங்களுக்கு மட்டும் சொல்லுங்க ! தம்பிக்கு ஒரு பீர் சொல்லுங்க !ச்ச !மோர் சொல்லுங்க !

ச.சுந்தரம் :  எம்மா  காமாட்சி  தம்பிக்கு  மோர்  கொண்டு வா !

கனகா  மோர் கொண்டுவைக்கிறார் !

அப்போது ராமராஜன் கனகாவிடம் :  I am crazy about you !

 ச.சுந்தரம்: தம்பி ! have it ! I am extremely sorry  for the incident happened on that day night . I don't like competition !


ராமராஜன்: Sorry ! i am not responsible for that  uncle !

 ச.சுந்தரம்: OK தம்பி ! Leave it ! நீங்க சின்ன வயசுல இருந்தே ஆடுறீங்க போல !  ஆட்டத்த எங்க கத்துக்கிட்டீங்க ?

கௌண்டமணி : ஆட்டகாரங்ககிட்ட !

 ராமராஜன்:  அண்ணே ! Stop  funny ! actually my father was a great dancer ! he got so many medals ! also he got medal from MGR . After his death , My mother trained me !she is also a good dancer ! எனக்கு எல்லாமே அம்மாதான்!  நீங்க கூட பார்த்திருப்பீங்களே !

ச. சுந்தரம் : நோ ! பார்த்தது இல்ல ஆனா நிறைய கேள்விபட்டுருக்கேன் ! சரி தம்பி நீங்க சாப்பிட்டுகிட்டு இருங்க நான் போயிட்டு வர்றேன் !


அவர் போனவுடன் நம்ம  அண்ணன் கிராமராஜன் காமாட்சி (கனகா ) மேல லவ்வு வந்து  பாட்டு பாட  ஆரம்பிக்கிறாரு.  கீழே சொடுக்குங்க  அந்த அழகான பாட்ட பார்க்குறதுக்கு !


என்னடா கரகாட்டக்காரன் பாட்ட போடுறதுக்கு வில்லுபாட்டுகாரன் பாட்ட போடுரான்னு பாக்குறீங்களா ! அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க ! இந்த பாட்ட பாத்ததுக்கப்புறம் தான்  எனக்கு இந்த பதிவு யோசனையே வந்தது ! அப்புறம் பாதி வசனம் ஆங்கிலத்துல வருதேன்னு குழம்பாதீங்க ! நம்ம கெளதம் படம் அப்படித்தானே  பாதி இங்கிலீஷ் பாதி தமிழ்னு  எடுப்பார் !மறக்காம  கருத்துரைக்கவும் ! பிடித்திருந்தால் ஓட்டு போட்டு  அதிகம் பேர் படிக்க பரிந்துரை செய்யவும் !

நன்றியுடன்
இரா.மாடசாமி




                                
[மேலும் படிக்க>>>]

Wednesday 17 October 2012

ஆரோக்கிய பழக்கங்கள் 10 !!! தொடர்பதிவு -1

- 3 comments

வணக்கம் நண்பர்களே ,
                                                   சென்ற பதிவில் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான 10 ஆரோக்கிய கட்டளைகள்  பற்றி தெரிந்து கொண்டீர்களா ! இப்போது ஆரோக்கிய பழக்கங்களை பற்றி தெரிந்து கொள்வோம் .

[மேலும் படிக்க>>>]

Saturday 13 October 2012

அன்றாட வாழ்க்கைக்கு தேவையான 10 ஆரோக்கிய கட்டளைகள் !!!

- 6 comments
 வணக்கம் நண்பர்களே !
                                                   இன்றைய உலகில் நாம் அனைவரும் எந்திரம் போல சுறுசுறுப்பாக இயங்கிகொண்டிருக்கிறோம் . ஆனால் ஆரோக்யமாக இயங்கி கொண்டிருக்கிறோமா என்றால் மௌனம் தான் பதில். அதற்காகவே இந்த  பதிவு. நண்பர் ஒருவர் துண்டு பிரசுரம் ஒன்றை என்னிடம் காண்பித்தார் . அதில் உள்ள தகவல்களை அப்படியே உங்களுக்கு அளிக்கிறேன் ! இதில் வரும் ஆலோசனைகள் எதுவும் எனது சொந்த கருத்துக்கள் கிடையாது. பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

[மேலும் படிக்க>>>]

Tuesday 9 October 2012

அப்பாவும் நானும்!! -தொடர் பதிவு -2

- 4 comments
வணக்கம் நண்பர்களே !
                                                அப்பாவும் நானும் தொடர்பதிவு  எனக்கு பழைய நினைவுகளை மீட்டுத்தருகிறது . பதிவர்கள் மற்றும் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுத்தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.இனி இந்த பதிவில் தொடர்வோம் !

-------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு ஞாயிற்று கிழமை . ஏழாம் வகுப்பு படித்துகொண்டிருந்த  நான் சாவகாசமாக தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த அப்பாவிடம், காதல் என்றால் என்ன ? என கேட்டேன் !  சமையல் அறையிலிருந்த என் அம்மா தோசை கரண்டியோடு அடிக்க வந்துவிட்டார் ! அதை தடுத்து நிறுத்திய  அப்பா,  அம்மாவிடம் " இதுல என்ன தப்பு இருக்கு" நம்மகிட்ட கேட்காம யார்கிட்ட போய் கேட்பான் ! என கூறி அம்மாவை அனுப்பிவைத்தார் . பின் என்னிடம் , உனக்கு அம்மாவை பிடிக்குமா ? அப்பாவை பிடிக்குமா ? என கேட்டார் . ரெண்டு பேரையுமே ! என்றேன் நான் . அவர் விடாமல் , யாரை அதிகமாக பிடிக்கும் என்றார் . இப்போது  சற்று நேரம் யோசித்துவிட்டு "அம்மா " என்றேன் .  இதுதான் காதல் என்றார் . புரியவில்லை என்றேன் . ஒருவர் மீது அளவு கடந்த நேசம் வைப்பதற்கு பெயர்தான் காதல் என்றார் ! எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு அழகாக சொல்லி புரியவைத்துவிட்டார் ! அன்றிலிருந்து எனக்கு அப்பாவின் மீது அளவுகடந்த நேசம் வந்துவிட்டது! மன்னிக்கவும் , காதல் வந்துவிட்டது !
-----------------------------------------------------------------------------------------------------------------------

சென்னைக்கு வந்த புதிதில் வியாபாரம் சுமாராக இருந்ததால் அப்பா ஒரு சிறிய ஒண்டி குடுத்தனம் உள்ள வீடு  ஒன்றை  வாடகைக்கு பார்த்து எங்களை குடியமர்த்தினார் . பின்னர் உறவினர் ஒருவர் எங்கள் தெருவுக்கு அடுத்து ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி எங்களுக்கு வாடகைக்கு விட்டார். அந்த குடியிருப்பில் உள்ள அனைத்து வீட்டிலும் கணவன் மனைவி அனைவரும் நன்கு படித்து வேலைக்கு செல்பவர்கள் ! இதை கவனித்த நான் ஒரு நாள் அப்பாவிடம் , நம்ம அடுக்கு மாடி குடியிருப்புல  நம்ம அம்மா மட்டும்தான் படிக்கலப்பா ! என்றேன் .  பொளேரென அடி விழுந்தது என் கன்னத்தில் ! அப்பாவேதான் ! அம்மா மௌனமாகவே இருந்தார் !
அப்பா,என்னடா ! ரொம்ப படிசுட்டோம்னு திமிரா உனக்கு? அம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேள் !என்றார்.மன்னிப்பு கேட்டேன் !  நான் செய்த தவறுக்கு வெட்கி தலைகுனிந்தேன் !  யாரையும் தரகுறைவா பேசக்கூடாது ! நீ அவங்க வயித்துல இருந்துதான் வந்த அத மறந்துறாத !  என்றார் . அவர் பேச பேச என் மண்டையில் சம்மட்டியில் அடித்தது போல் இருந்தது. எவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டோம் என அன்று தான் உரைத்தது.  அந்த நிகழ்வுக்கு பிறகு  இன்றளவும் அவர்  சொன்ன வார்த்தைகளை காப்பாற்றி வருகின்றேன் .



நன்றியுடன்
இரா.மாடசாமி.


[மேலும் படிக்க>>>]

Wednesday 3 October 2012

தொலைந்து போன விளையாட்டுக்கள் !

- 9 comments
வணக்கம் நண்பர்களே!
                                          ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு ஊரிலிருந்து ஒரு உறவினர் வந்திருந்தார் !  அவர்  ஒரு ஆசிரியர் ! எனது மகனை  பார்த்து உன்  பெயர் என்ன? என்ன படிக்கிறாய்?  என கேட்டார் ! அவனும் பதில் சொல்லிவிட்டு !  தொலைகாட்சியில்  சிறுவருக்கான அந்த அலைவரிசையை பார்ப்பதில் ஆர்வம் காட்டிகொண்டிருந்தான் ! அவர் என்னை பார்த்து , பையன  வெளியில கூட்டிட்டு போறதில்லையா ? என கேட்டார் ! நான் இல்லை என்பது போல் தலை அசைத்தேன் ! அவர், நம்ம ஊர்னா தெருவில இருக்குற பசங்க கூட விளையாடலாம். இங்க எங்க முடியுது. பூட்டி வச்ச இரும்பு கம்பிக்கு உள்ளதான் இருக்க வேண்டி இருக்கு என சொல்லி பின் சிறிது நேரத்தில் சென்று விட்டார் ! அவர் சென்றவுடன் எனது சிறுவயது ஞாபகங்கள் என்னை என் ஊருக்கு அழைத்து சென்றது ! அதை பற்றிய ஒரு பதிவு இது !


கிராமத்தில் நான் சிறுவனாக இருந்த பொது பள்ளியில் இருந்து நேராக வீட்டுக்கு வந்த உடன் பையை  ஒரு மூலையில் போட்டுவிட்டு தோப்பிற்கு விளையாட சென்று விடுவேன் !  நிறைய  விளையாட்டுக்கள்  விளையாடுவோம் ! ஓடிபிடிப்பது, மறைந்து விளையாடுவது , உப்புமூட்டை , மணலில் வீடு கட்டுவது ,  கோலி , பல்லாங்குழி, திருடன் -போலீஸ் ,பரம பதம், கண்ணாமூச்சி ,  சிறிய சாமான்களை வைத்து  சோறு பொங்குதல் , போன்ற பல விளையாட்டுக்கள் விளையாடுவோம். இதில் ஒவ்வொரு  விளையாட்டும்  நம் வாழ்க்கையின் ஒரு உணர்வை வெளிபடுத்தும் .  ஓடிபிடிப்பது -  ஓட்ட பயிற்சி , உப்புமூட்டை - வலிமை சேர்க்கும் , மணல் வீடு - சோறு பொங்குதல்  போன்றவை  சிறுவர்களுக்குள்ள ஒற்றுமையை  உணர்த்தும், பல்லாங்குழி - சேமிப்பு மற்றும் எண் கணக்கின் அவசியத்தை உணர்த்தும் , . மேலும்  இரவில் ஒரு விளையாட்டு விளையாடுவோம்  அதன் பெயர்  கூட்டாஞ்சோறு   அதாவது ஒவ்வொருவரும் தத்தம் அவரது வீட்டில் செய்த  உணவை, அனைவரும் எடுத்துகொண்டு யாருடைய  வீட்டிலாவது  வைத்து பகிர்ந்து உண்ண வேண்டும் !  தினம் ஒரு வீடு வீதம் , ஒவ்வொரு வீடாக சென்று சாப்பிட வேண்டும் ! இந்த விளையாட்டில்   விட்டுகொடுத்தல் , சகோதரத்துவம் , போன்ற பண்புகளை  வளர்க்கும் ! 
இன்னொரு விளையாட்டு உங்களுக்கு தெரிந்திருக்குமா என்று தெரியாது ! அதன் பெயர் படப்பெட்டி ! அதாவது ஒரு கட்டத்தில் தமிழ் படங்களை எழுதி அதை கோடு  போட்டு பிரித்து அதில் சுமார் 30  முதல் 40 படங்கள் எழுதி வைத்திருப்பார்கள் . பைனான்சியர் ஒருவர் இருப்பார் , அவரிடம் காசு கொடுத்து ஒரு படம் வாங்கி கொள்ளவேண்டியது ! பரம பதம் போல கட்டையை உருட்ட வேண்டும் . நான்கு பேர் விளையாடும் அந்த ஆட்டத்தில், காசு கொடுத்து வாங்கிய உங்கள் படத்தின்  கட்டத்தில் மேல் நின்று விட்டால்  அதற்க்கு காசு கொடுக்க வேண்டும் !  பணத்திற்காக  சிகரெட் அட்டைகள் பயன்படுத்துவோம். இதைத்தான் பேங்க் கேம் என சீனாகாரன் நம்மை ஏமாற்றுகிறான்!


இவ்வாரான விளையாட்டுக்கள்  இப்போது அழிய காரணம்  புத்தகசுமை,நேரமின்மை , நகரமயமாதல், சிறுவர்களுக்கான தொலைக்காட்சி அலைவரிசை என நிறைய  வந்தபின் தான் !  இப்போது  எனது மகன் பள்ளி விட்டவுடன்   குழந்தைகளுக்கான  அலைவரிசை , வீட்டு பாடம் , சாப்பாடு , தூக்கம்  என அவன் வாழ்க்கையே மாறிக்கிடக்கிறது ! இதற்க்கு பின்னால் வரும் தலைமுறையை நினைத்தால் இன்னும் பயமாக இருக்கிறது. 


[மேலும் படிக்க>>>]

Thursday 27 September 2012

அப்பாவும் நானும்! தொடர்பதிவு-1!

- 2 comments


வணக்கம் நண்பர்களே!  
                      ஒவ்வொருவருக்கும் தனது முதல் ரோல் மாடல் தனது தந்தைதான் என்று சொன்னால் அது மிகை ஆகாது! எனக்கும் அதுபோலத்தான். என் தந்தைக்கும் எனக்கும் இடையில் நடந்த சில சுவையான சம்பவங்களை உங்களுடன் பகிர்கிறேன்.
அரசாங்க பணியில் விருப்ப ஒய்வு வாங்கிவிட்டு சொந்தமாக தொழில் செய்வதற்காக  சென்னையில் சிறிய மளிகை கடை ஒன்றை ஆரம்பித்தார். வருமானம் சொல்லும் படியாக இல்லை . விடுமுறை தினங்ளில் அடிக்கடி கடைக்கு சென்று வருவேன். ஒரு நாள், தந்தை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது நான் கடையை பார்த்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு வாடிக்கையாளர், தம்பி! க்ளோசப் பேஸ்ட் ஒன்னு கொடு! என கேட்டார், நான் தேடி பார்த்துவிட்டு,க்ளோசப் இல்லைங்க! என்றேன். உடனே அப்பா உள்ளிருந்து சார் கோல்கேட் தரட்டுமா? என்றார்! வாடிக்கையாளரும் சரி என வாங்கி சென்றார். உடனே என் தந்தை என்னை பார்த்து வியாபாரம் எப்படி செய்யனும்னு கத்துக்க! கெடுக்காத என்றார், அசிங்கமாக போய் விட்டது எனக்கு! எப்படியாவது தந்தையிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என உறுதி எடுத்துகொண்டேன். சற்று நேரத்தில் இன்னொரு வாடிக்கையாளர், தம்பி ! வாழைப்பழம் இருக்கா? என  கேட்டார். அப்போதுதான் விற்று தீர்ந்தது வாழைப்பழம். ஆனாலும் என் தந்தையிடம் நல்ல பெயர் வாங்கும் ஆர்வத்தில் , சார் பேரீச்சம்பழம் இருக்கு தரட்டுமா? என்றேன். வாடிக்கையாளரும் அப்பாவும் என்னை பார்த்து சிரித்தனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா முதல் முதலாக சபரிமலைக்கு மாலை போட்டார்! எங்கள் வீட்டில் அதிக சந்தோஷம் எனக்குத்தான். காரணம். மாலை போட்டால் அப்பா அடிக்கமாட்டார், திட்டமாட்டார் என அம்மா சொன்னார்! அது போலவே அப்பாவும் என்னை வாங்க சாமி,போங்க சாமி என்றார். ஒரு நாள் மொத்த வியாபாரம் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு கடை திரும்பினேன். என் போதாத நேரம் , ஒரு பொருள் மிஸ்ஸிங். சரி அப்பாதான் மாலை போட்டிருக்கிறாரே நம்மை திட்ட மாட்டார் என சந்தோஷமாக இருந்தேன். இடிவிழுந்தது அந்த எண்ணத்தில், அட புறம்போக்கு சாமி! எருமமாடு சாமி ! உனக்கு அறிவு இருக்கா சாமி! என மரியாதையோடு திட்ட ஆரம்பித்தார்! கொடுமைடா சாமி என நானே நொந்துகொண்டேன் !   

தொடரும் !!!!!!


நன்றியுடன் 
இரா.மாடசாமி                        





[மேலும் படிக்க>>>]

Monday 24 September 2012

வடிவேலுவும் ! தமிழ் பாடல்களும் !

- 4 comments

 வணக்கம் நண்பர்களே !
                                             கொஞ்ச காலமா நம்ம  நகைச்சுவை நடிகர் வடிவேல் அண்ணன் பத்தி ஒண்ணுமே போடல ! அதனால அவர வச்சு ஒரு நகைச்சுவை பதிவ போடலாம்னு இந்த பதிவ போடுறேன் ! அதாவது நம்ம வடிவேல் அண்ணன் தியேட்டருக்கு போய் சில தமிழ் படங்கள பாக்குறார் ! அதுல வர்ற  சில தமிழ் பாடல்கள் அவர சில கேள்விகள் கேட்க வைக்குது ! அதுக்கு  வடிவேலு அண்ணன் கமெண்ட் குடுக்குறார் ! இது ஒரு கற்பனை கலந்த  நகைச்சுவை பதிவு ! யாருடைய  மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் !

பாடல் : ஏன் உச்சி மண்டைல சுர்ருங்குது !
வடிவேல்:  தம்பி ! வாராவாரம்  சனிக்கிழமை எண்ணெய் தேச்சு குளிப்பா! சரி ஆயிடும் !

 பாடல் : டாடி மம்மி  வீட்டில் இல்ல ! தட போட யாரும் இல்ல !
விளையாடுவோமா உள்ள வில்லாடா!
வடிவேல் : யே ! யே ! என்ன இது ! சின்ன புள்ள தனமா இருக்கு ! பொம்பள புள்ள மாதிரியா நடந்துக்குற ! இப்பிடி எல்லாம் பேசிக்கிட்டு இருந்த ! மவளே!!

பாடல் : டான் ! டான் ! டான் ! பில்லா டான் ! டானுக்கெல்லாம் டான் !
வடிவேல் : ஏன் தம்பி கோயில் மணி எதுவும் வாய்க்குள்ள போட்டு முழுங்கிட்டயா! ஏன்பா வாயில இருந்து டான் டான் சத்தம் வருது ! 

பாடல் : எவண்டி உன்ன பெத்தான் !பெத்தான் !பெத்தான்! அவன் கைல கெடச்சான் செத்தான் !
வடிவேலு : மவனே !  இப்ப நீ என் கைல கெடச்ச! பாட்ட பாரு !

பாடல் : ஒய் திஸ் கொலைவெறி ! கொலைவெறி !கொலைவெறிடி!
வடிவேல் :  அதேதான் நான் கேக்குறேன் ! உன்னை எல்லாம் யார் பாட்டெழுத சொன்னது !ஒய் திஸ் கொலைவெறி !


பாடல் : எந்திர்ர்ரா !எந்திர்ர்ரா !எந்திரா !எந்திரா!எந்திரா!எந்திரா!எந்திரா!என்திரன்!
வடிவேலு : இவரு ஏன் இத்தன தடவ நம்மள எந்திரிக்க சொல்றாரு ! தேசிய கீதம் பாட போறாரோ ! சரி எந்திருச்சுருவோம்! 

பாடல் : ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் !
வடிவேலு: ஸ்ஸ்ஸப்பா  முடியல ! முடியல !ஏன்டா அவசரம்னா போகசொல்ல வேண்டியதானே ! பாட்டு பாடிக்கிட்டு நிக்கிற!

பாடல் : மாக்க ஏல ! மாக்க ஏல ! காயகவுவா !
வடிவேல் : நல்லத்தனய்யா போய்கிட்டு இருந்துச்சு ! திடீர்னு ஏன் இந்தி பாட்ட போடுறாய்ங்க !


பாடல்: கட்டி புடி ! கட்டிபுடிடா! கண்ணாளா  கண்டபடி கட்டிபுடிடா!
வடிவேலு : அய்யோ ! அய்யோ ! அவன் சும்மா இருந்தாலும் இவ சும்மா இருக்க மாட்டா போலருக்கே ! அடியே!

கடைசியாக  வெறுத்துபோய் வீட்டுக்கு வந்து டிவி பார்க்கலாம்னு ரிமோட்ட ஆன் பண்றார் ! அப்பா ஒரு பழைய MGR பாடல் ஓடிக்கிட்டுருக்கு !

பாடல் : இன்பமே ! உந்தன் பேர் பெண்மையோ !
வடிவேல் : இவர் ஒருத்தரு ! அமுக்குன இடத்துலேயே அமுக்கிகிட்டு !





[மேலும் படிக்க>>>]

Tuesday 18 September 2012

இளையராஜா ! இசையராஜா!

- 8 comments
வணக்கம் நண்பர்களே !
                                                 அண்மையில் "நீதானே என் பொன் வசந்தம்" படத்தின் இசை வெளியீட்டு விழாவினை தொலைகாட்சியில்  பார்த்தேன் ! இளையராஜாவின் இசையில் நிறைய எதிர்பார்ப்புக்களோடு திரைக்கு வர இருக்கிறது ! பொதுவாக இளைய ராஜா இசை வெளியீடு நிகழ்சிகளில் பங்கேற்க மாட்டார். இப்போது அடிக்கடி பங்கேற்று  ரசிகர்களுக்கு உற்சாகமூட்டுகிறார் . நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைஞானி இசையில் வெளிவந்த சில முத்தாய்ப்பான பாடல்களை அவருடைய இசை குழுவில் உள்ளவர்கள் வாசிக்க கேட்டேன். அது  என்னை கொஞ்சம்  பின்னோக்கிய  காலத்திற்கு அழைத்து சென்றது ! அதை பற்றிய  ஒரு பதிவுதான் இது .  இந்த பதிவு முழுக்க முழுக்க இசைஞானி அவர்களுக்கு சமர்ப்பணம் .


இளையராஜா ! தமிழ் சினிமாவிற்கு என்றுமே இசையராஜாதான் இரா.பார்த்திபன் சொன்னதுபோல ! 1970-80 கால கட்டத்தில் தமிழ் சினிமாவின் இசை துறையில்  ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப வந்த இசை சக்கரவர்த்தி !  இசை என்பது கேட்க கூடியதல்ல ! உணரக்கூடியது !அந்த உணர்வை தனது ஒவ்வொரு பாடலிலும் தருகிறவர் இசைஞானி ! இன்றளவும் பின்னணி இசையில் இவரை அடித்து கொள்ள ஆளே இல்லை எனலாம் ! மற்றவரின் இசை நம்மை மகிழ்ச்சி படுத்தும் ! இவரின் இசை மட்டுமே  நம்மை பரவசபடுத்தும் !

 " புது ராகம் படைப்பதாலே நானும் பிரம்மனே " ஆம் ! இவர் உண்மையில் இசைக்கான பிரம்மன் ! ஒவ்வொரு படைப்பும்  ஒவ்வொரு விதம் !முந்தய படைப்பின்  சாயம் இல்லாமல் நேர்த்தியாக  இன்னொன்றை   படைப்பதில் இவர் பிரம்மன் தான் !

இவரது படைப்பில் எனக்கு பிடித்த சிலவற்றை  உங்கள் முன் பகிர்வதில
மகிழ்ச்சியடைகிறேன் .

தாய் மூகாம்பிகை! " ஜனனி ! ஜனனி!  என்ற இந்த பாடல்  கண்களை  மூடிக்கொண்டு  தனி  அறையில் நீங்கள் கேட்டால்  கண்டிப்பாக ஒரு  மாற்றத்தை உணர்வீர்கள்!

அவதாரம்!"தென்றல் வந்து தீண்டும்போது" என்ற பாடலின் சரணத்துக்கு முன் வரும்" தந்த தான" என தொடங்கும்  ராஜாவின் ஹம்மிங் ! சான்ஸே இல்லை ! ராஜா ராஜா தான் !

அரங்கேற்றவேளை ! " ஆகாய வெண்ணிலாவே "இந்த பாடலின் பல்லவியில் வரும் ஒவ்வொரு வரிகளும் ஏற்ற இறக்கத்துடன் அழகான  சந்தம்!மேலும் பல்லவிக்கு முன் வரும் வயலின் இசை மனதை மயக்கும் !

மூன்றாம் பிறை !"கண்ணே கலைமானே"! சிறு வயதில் இந்த பாடலை போட்டுவிட்டால் தானாகவே  தூங்கி விடுவேனாம் ! அம்மா  சொன்னது ! அருமையான தாலாட்டு !

பன்னீர் புஷ்பங்கள் !"ஆனந்த ராகம் " என்ற பாடல்களுக்கு முன் வரும் இசை கோர்வை ஜிவ்வென்று உங்களை இழுத்தால் ஆச்சர்யமில்லை ! கீழே சொடுக்கி அதை உணருங்கள் !


சிந்து பைரவி !" கலைவாணியே !  என்ற பாடலில்  " கண்ணீர்  பெருகியதே " என யேசுதாஸ் உச்ச ஸ்தாதியில் பாடும் இடத்தில் நமக்கு கண்ணீரை வர வைத்துவிடும்! இளையராஜா -வைரமுத்து கூட்டணி மீண்டும்  எப்போது ?

தர்ம பத்தினி ! நான் தேடும் செவ்வந்தி பூவிது ! எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன் !

முதல் மரியாதை ! ராசாவே உன்னை நம்பி ! மெல்லிசையின் முத்திரை !

இன்னும் சொல்லிகொண்டே போகலாம் ! பின்னணி பற்றி எழுத வேண்டுமே !

 மௌன ராகம்- கார்த்திக் ரேவதி காதல் காட்சியின்  பின்னணியில்  ஒலிக்கும்    "கீ  போர்டு "  இளையராஜாவின் ஸ்கோர் போர்டு

வீடு திரைப்படத்தில் " சொக்கலிங்க பாகவதரின் சோகத்தை உணர்த்தும்
 வயலின்  எத்தனை  முறை என்னை அழ வைத்தது !

காதலுக்கு மரியாதை-கடைசி காட்சியில் இவர் சேர்த்திருக்கும் பின்னணி இசை நீங்களே கேளுங்கள்  ! முழுவதுமாக கேட்க வேண்டும் ! குறிப்பாக ஷாலினியின் தாயிடம் ஸ்ரீவித்யா ஷாலினியை பெண் கேட்டதும் " ஷாலினியின் தாய்" எடுத்துகோங்க,கூட்டிட்டு போங்க "  என சொல்லி முடித்தவுடன் வரும் இசை கோர்வையை கவனமாக கேட்கவும் !



 இது போல் ஆயிரம் ஆயிரம் சொல்லிகொண்டே போகலாம் !  மாலை சூட மலர்கள்  பத்தாது ! புகழை வர்ணிக்க வார்த்தைகள் பத்தாது !  வாழ்க இசைஞானி! வளர்க அவர்தம் புகழ் !


நன்றியுடன்
இரா.மாடசாமி

[மேலும் படிக்க>>>]

Saturday 15 September 2012

நகைச்சுவை கவிதை கதம்பம்

- 3 comments
வணக்கம் நண்பர்களே !
                                                   நீண்ட நாட்களுக்கு பிறகு எனது யார் நடிகன் ?   

பதிவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தன . வாக்களித்த அனைவருக்கும் மிக்க

 நன்றி !  ஒரு சிறிய  கதம்பம்   ஒன்றை இந்த பதிவில் விட்டு செல்கிறேன் !

 -----------------------------------------------------------------------------------------------------------------------
கவிதை 

இசைக்கருவிகள்

காலில் படக்கூடாதம் !

கழட்டிவிடு கண்ணே!

உன் கொலுசுகளை !
--------------------------------------------------------------------------------------------------------------------------
நகைச்சுவை 



ஆசிரியர்:  ஏண்டா   இவ்வளவு லேட்டா  வர்ற  !

மாணவன் : இந்த  பொண்ண  பின் தொடர்ந்து வந்தேன்   சார் !

ஆசிரியர்:  ஏம்மா  நீ ஏன் லேட்டு ! நீ வர வேண்டியதானே !

மாணவி :  அவன் ரொம்ப மெதுவா பின் தொடர்ந்தான் சார் !

          **************************************************

ஆசிரியை : மாணவர்களே!இப்ப ஒரு வாக்கியம் சொல்வேன்  அது எந்த

                         காலத்தை  குறிக்கிறது என சொல்லணும் சரியா ?

மாணவர்கள் : சரிங்க டீச்சர் !

ஆசிரியை: நான் அழகாக  இருக்கிறேன் ! இது எந்த காலம் ?

மாணவர்கள் : இறந்த காலம் டீச்சர் !

        ******************************************************

ஆசிரியர் : நெப்போலியனின்  வெற்றிகள்  பற்றி சொல்லு  ?


மாணவன்: சீவலப்பேரி பாண்டி , கிழக்கு சீமையிலே , எட்டுபட்டி ராசா !

       **********************************************************  


--------------------------------------------------------------------------------------------------------------------------

 கணிணினியில் தட்டச்சு செய்து கொண்டிருந்த என்னிடம் சொன்னான்

 என் மகன்

" உங்க கம்ப்யூட்டர் தப்புப்பா"!

 ஏண்டா?  என்றேன்  ஆச்சர்யத்தோடு !

"நயன்க்கு  அப்புரம் டென் தானே  வரும் ! இங்க பாருங்க ஜீரோ இருக்கு!

 மழலையின் அறிவில் பூரிப்படைந்தேன் !

 -------------------------------------------------------------------------------------------------------------------------




நன்றியுடன்

இரா.மாடசாமி


 
[மேலும் படிக்க>>>]

Thursday 13 September 2012

யார் நடிகன் ?

- 6 comments
வணக்கம் நண்பர்களே !
                      என்னுடைய முந்தைய பதிவான புரியாத பாடல்வரிகளும் ! அதன் அர்த்தங்களும் ! பதிவு அனைவருக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.நிறைய பேர் பாராட்டி எழுதி இருந்தனர்.அனைவருக்கும் நன்றி ! 


அண்மை காலமாக  திரை உலகில் நான் அடிக்கடி கேள்விப்படும் ஒரு நிகழ்வு.அதாவது ஒரு பெரிய இயக்குனரும்,பெரிய நடிகரும் இணைந்து ஒரு படம்  பண்ண ஒப்புகொண்டு  பின்னர் அதை கைவிடுவது! காரணம் கேட்டால், அந்த பெரிய  நடிகர் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிடுவார்.அது என்னவெனில்" இந்த கதை எனக்கு பொருந்தாது" "என்னுடைய ரசிகர்கள் விரும்பமாட்டார்கள்" என்று கூறுவார். இதை பற்றிய  ஒரு சிறு அலசல் இந்த பதிவு.


யார் கதாநாயகன்!
                  எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் கதையின் கருவை உள்  வாங்கி கொண்டு,கதைக்கு பொருந்தி, அதற்கேற்றாற்போல் தம்மை மெருகேற்றி  நடிக்க கூடியவர்தான் கதையின் நாயகன் ! ஆனால் இன்று கதா நாயகன் வெறும் நாயகனாக  மட்டுமே நமக்கு தோற்றமளிக்கிறார்.  அன்றைய காலத்தில்  நடிகர் திலகம்  திரு .சிவாஜி அவர்கள் கதைக்காக மட்டுமே நடித்தார். அவர் அவ்வாறு  நடிக்கவில்லை எனில் ஒரு வீரபாண்டிய கட்டபோம்மனையோ, கப்பலோட்டிய தமிழனயோ , கர்ணனயோ  நாம் அவர் உருவில் கண்டிருக்க முடியாது !

ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ,பொது மக்களின் எதிர்பார்ப்பும் !

என்னதான் மக்களுக்காக நடித்தாலும் ரசிகர்கள்தான் தியேட்டருக்கு முதல் நாளில் வந்து எங்களை வாழ்த்துகிறார்கள் ! படம் வெளியிடும் முதல் நாள்  வேலையை விட்டு விட்டு விடிய விடிய உழைக்கிறார்கள் அதனால் அவர்களின் ரசனைக்குத்தான் படம் எடுக்க முடியும்  என்று கூறலாம் ! ஒரு  ரசிகன் எதனால் ஒரு நடிகருக்கு ரசிகராகிறான் ! அந்த நடிகரானவர்  ஏதோ  ஒரு வகையில் அந்த ரசிகனை ஈர்க்கிறார்!  உடனே அந்த நடிகர் மீது பற்று உண்டாகிறது.அவ்வளவுதான் அடுத்து வரும் படங்களில் அந்த நடிகர் நடித்தாலும் சரி! இல்லை என்றாலும் சரி! ஆனால் ஒரு சாதாரண , நடுநிலையான ஒருவர்  படத்தில் நடிகரின்  நடிப்பையோ , அவர் செய்யும்  சாகச காட்சிகளையோ   மட்டும் விரும்புவதில்லை  மாறாக  படத்தின் அத்தனை அம்சங்களையும் விரும்புவார் ! பிடித்திருந்தால்  நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பரிந்துரை செய்வார்! இவ்வாறு பரிந்துரை செய்த படங்கள் தான் நூறு நாட்களுக்கு ஓடுகிறது! 

கதைக்காக நடித்ததால்தான் சிவாஜிக்கு   இன்றளவும் நமது தாத்தா ,பாட்டி கூட ரசிகர்களாக இருக்கிறார்கள். மக்கள்  அவருக்கு நடிகர் திலகம் என பட்டம் சூட்டினரே அன்றி  யாரும்  ரசிகர் திலகம் என்று பட்டம் கொடுக்கவில்லை! ஒரு குறிப்பிட்ட ரசிகர்  கூட்டத்துக்கு  மட்டும் நடிப்பேன்  என்று சொன்னால் அந்த நடிகரை  மக்கள் மறக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை !



நன்றியுடன்!
இரா.மாடசாமி  






[மேலும் படிக்க>>>]

Wednesday 12 September 2012

புரியாத பாடல்வரிகளும் ! அதன் அர்த்தங்களும் !

- 12 comments
வணக்கம் நண்பர்களே !
                                                 இன்றைய காலங்களில்   நல்ல திரைப்பட பாடல்கள்  வந்தாலும், வார்த்தைகள்  புரிவதில்லை.அதற்காகவே மிக அரும்பாடுபட்டு அந்த பாடல் வரிகளின் அர்த்தம் கண்டுபிடிக்கும் முனைப்பில் இறங்கி சிலவற்றை மட்டும் கண்டுபிடித்துள்ளேன். இது யூகத்தின் அடிப்படையில் கண்டுபிடிக்க பட்டது . பாடலாசிரியர்  என்ன நினைத்து எழுதினாரோ எனக்கு தெரியாது !


முதலில் இப்போது திரை அரங்குகளில் ஓடிகொண்டிருக்கும் "நான்" திரைப்படத்தில் வரும் " மாக்க ஏல, மாக்க ஏல, காயகவுவா " அதாவது திருநெல்வேலியை மற்றும் தூத்துக்குடி பகுதியை சார்ந்த மக்கள் தமக்கு  நெருக்கமானவர்களை "ஏலே மக்கா" என அன்போடு அழைப்பர்கள். அதனை அடிப்படையாக கொண்டு  பாடலாசிரியரும் இசை அமைப்பாளரும் அதை மாற்றி போட்டு "மாக்க ஏல" என  வரிகளை அமைத்துள்ளனர். மேலும்  "கையை கழுவ வா " என்பதன் சுருக்கமே "காயா கவு வா" என்பதாகும் . இப்போது படியுங்கள்  ஏலே மக்கா,ஏலே மக்கா,சாப்பிட்டு விட்டு கையை கழுவ வா என்பதே இதன் பொருளாகும் .

அடுத்து , காக்க காக்க படத்தில் வரும் "ஓமகா சீயா மாகியாஹா ,ஹீமோ மகாசகியா " இந்த பாடல் படமாக்க பட்டிருக்கும் இடம் கடற் பகுதி  அதை உணர்த்தவே  இந்த வரிகள் (மகா- பெரிய ,"SEA"yaa   - கடலே )  (மாகியாகா- யாதுமான) (ஹீமோ - மானிடன் ) (மகா- பெரிய )( சகியா -தோழியா)
ஓமகா சீயா -ஒ  பெருங்கடலை போன்றவளே !
மாகியாஹா-எல்லாமாகிய !
ஹீமோ மகாசகியா -  மானுடத்தில் பெரிய தோழியே

அடுத்து , காதலில்  விழுந்தேன் திரைப்படத்தில் வரும் அட்ரா  அட்ரா நாக்க முக்க என்ற  பாடல். குத்து சண்டையில் நாக் அவுட்   என்று அழைக்கப்படும் ஒரு முறையாகும் . அதாவது மூக்கில் அடித்து  நாக் அவுட் செய் என்பதே இதன் விளக்கம் விரிவாக சொல்ல போனால் அடிடா! அடிடா! மூக்கில் அடித்து நாக் அவுட் செய்  என்பதாகும்

அடுத்து ஒரு பழைய பாடல் ! சூரியன் படத்தில் வரும் லாலாக்கு டோல் டப்பிமா ! லா - விதி , லாக்கு-பூட்டு , டோலு - சுங்க சாவடி , டப்பி,டப்பு- காசு
அதாவது  பூட்டியிருக்கும் சுங்க சாவடியில்  விதிப்படி காசு கட்டிவிட்டு செல்லுங்கள் என்று பாடலாசிரியர் கூறுகிறார்.

நண்பர்களே ! இந்த பாடல்களின்  ரசிகர்கள் கோபம் கொள்ள கூடாது!  புரியாத வரிகளை அர்த்தம் கண்டுபிடிக்கும் ஒரு சிறு முயற்சியே . இது ஒரு வானவில்லின்  இலக்கிய ஆராய்ச்சியின்  படைப்பு ! இந்த படைப்பிற்கு விழும் ஓட்டுக்களின் எண்ணிக்கையை பொறுத்து அடுத்த ஆராய்ச்சி தொடங்கும் !


நன்றியுடன் !
இரா.மாடசாமி




[மேலும் படிக்க>>>]

Friday 7 September 2012

எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !

- 4 comments
வணக்கம் நண்பர்களே ! 
                                         அண்மையில் நடந்த சிவகாசி வெடிவிபத்து என்னை நிலை குலைய செய்தது  !  விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவன் என்கிற முறையிலும் , அந்த ஊரில் தங்கி படித்தவன் என்கிற முறையிலும் என்னை இன்னும் வெகுவாகவே பாதித்தது!  வெடி விபத்தில் இறந்து போன அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை  இந்த கவிதை/பாடல் மூலம் தெரிவித்து கொள்கிறேன் !

தெற்கு தமிழ் நாட்டினிலே தொழில் செய்யும்  நகரமுங்க !
கரிசல் மண் பூமியிலே கந்தக காத்து வீசுமுங்க !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !


பட்டாசு செய்வதிலே பெயர் வாங்கி குடுத்ததுங்க  , இன்று 
பட்டாசு விபத்துக்கு பெயராகி போனதுங்க !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி ! 



ஒரு நாளு பண்டிகையாம் உங்களுக்கு தீபாவளி ! அதுக்கு 
ஒரு வருஷம் உழைப்பாங்க எங்க ஊரு தொழிலாளி !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !

மாவட்ட செய்தியிலே ஓரமாக வந்ததுங்க ! இன்று 
மாநிலத்தின் செய்தியிலே தலைப்பாக வந்ததுங்க !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !

அப்பப்போ வெடிவிபத்தில் பெரிய சத்தம் கேக்குமுங்க ! 
அப்பமட்டும்  சர்க்காரு சைரன் சத்தம் கேக்குமுங்க ! 
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !
 
பாஸ்பரசும் , கந்தகமும்  வாழ்க்கையாகி போனதுங்க !எங்களுக்கு
பட்டாசு வெடி விபத்து  வழக்கமாகி போனதுங்க !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !





நன்றியுடன் !
இரா.மாடசாமி 

                                        
[மேலும் படிக்க>>>]

Wednesday 5 September 2012

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !

- 8 comments
வணக்கம் நண்பர்களே !
                                             பின் வரும் நகைச்சுவைகள் அனைத்தும் நான் பார்த்து, படித்த , கேள்வி பட்ட நகைச்சுவைகள் மட்டுமே ! எதுவும் எனது சொந்த படைப்பு கிடையாது! ஆதலால்,  "நான் இதை  எங்கேயோ படிச்சுருக்கேன் !" என்று யோசிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்ளபடுகிறார்கள்!






அலெக்சாண்டர்:  முடியாது என்கிற வார்த்தையே என் அகராதியிலேயே  கிடையாது !
சர்தார்ஜி : அதுக்கு இப்போ  என்ன பண்றது ! டிக்க்ஷனரி வாங்கும்போதே பாத்து வாங்கணும் !
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

கணவன் : பங்கஜம் நீ பண்ணுன மைசூர்பா நல்ல இருக்கு ! ஆனா கடிக்கத்தான் முடியல ! கல்லு மாதிரி இருக்கு!
மனைவி : என்ன கொழுப்பு உங்களுக்கு !  அது அல்வா!
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
 
பயணி : நீங்க வண்டி ஒட்டுறதா பார்த்த பயமா இருக்குங்க !
டிரைவர் : பயமா இருந்த என்னை மாதிரி நீங்களும் கண்ணை மூடிக்குங்க !
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

ஆசிரியர் : உங்க பையனுக்கு தமிழ் உச்சரிப்பு சரியா வரல ! "ஏராளம்" அப்படீன்னு சொல்லச்சொன்னா "ஏளாரம்" அப்டீன்னு சொல்றான் ! டியூஷன் வச்சு தான் சொல்லி கொடுக்க முடியும் !
மாணவனின் தந்தை : அதுக்கு என்னங்க "தாளாரமா" சொல்லி குடுங்க !
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

நர்ஸ்: டாக்டர்! அந்த பேஷண்டுக்கு மயக்க மாத்திரை குடுத்தும் மயக்கம் வரல!
டாக்டர் : ஹாஸ்பிட்டல் பில்லை காமிங்க ! மயக்கம் வந்திடும் !
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

அப்பா : எல்லா பாடத்துலயும் பெயிலாயிட்டு என்கிட்டே Sign கேக்குறியா ! என்ன உன் அப்பன்னு சொல்லாதடா !
மகன் : சரி மச்சி  சீன் போடாம  Sign போடு
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
ஆசிரியர் : மாணவர்களே ! என்னை ஆசிரியராக பாவிக்காமல் உங்களில் ஒருவனாக எண்ணுங்கள !
மாணவன் :  மாப்ள  ! ஜன்னல் பக்கத்துல பாரேன் ! சூப்பர் figure !
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நோயாளி : டாக்டர் ! உடம்புல  சத்தே இல்லை டாக்டர் !
டாக்டர் :அதுக்கு தான்  சத்து டானிக் எழுதி கொடுத்தேனே !
நோயாளி : அந்த டானிக் மூடிய  தொறக்கவே முடியல டாக்டர் ! 
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ 


நகைச்சுவை அனைத்தும்  மொக்கையாக இருந்ததா?!  நன்றாக இருந்ததா ! கருத்துரைக்கவும் !  


நன்றியுடன்

இரா.மாடசாமி  

[மேலும் படிக்க>>>]

Friday 31 August 2012

திரும்பி பார்க்கிறேன்! கழுத்து சுளுக்கிகிச்சு!!!

- 13 comments
வணக்கம் நண்பர்களே ! 

                                                என்னடா  தலைப்பு  இப்படி இருக்கிறதே என  பார்க்க வந்தீர்களா!  இந்த பதிவு என்னுடைய 25 வது  பதிவு ! மிகவும் முக்கியமானது! திரும்பி பார்க்கிறேன்னு மட்டும்  போட்டா  வரமாட்டீங்கன்னு எனக்கு தெரியும் ! அதனால் தான் கழுத்து சுளுக்கிகிச்சு  அப்படீன்னு  சேர்த்து போட்டேன்  ! எப்படி ?!  




[மேலும் படிக்க>>>]

Wednesday 29 August 2012

நான் ரசித்த தமிழ் சினிமா ! ஒரு பார்வை!!-3

- 6 comments
வணக்கம் நண்பர்களே ,
                                         பதிவர் சந்திப்பு முடிந்த கையுடன் இந்த பதிவை எழுதலாம் என  எண்ணியிருந்தேன்!ஆனால் முடியவில்லை! 

இதற்க்கு முந்தைய பதிவை படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் 



இந்த வரிசையில்  நாம்  ரசிக்கபோகும் படம் உதிரிப்பூக்கள்! தமிழ் சினிமாவை உலக சினிமாவிற்கு உயர்த்திய ஒரு உன்னத கலைஞனின் படைப்பு!

1979 ல் வெளிவந்த இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர்.திரு.மகேந்திரன்.  உதிரிப்பூக்கள்!தலைப்பே க(வி)தை சொல்லும்! டைட்டில் கார்டிலேயே இயக்குனர் நமக்கு கதையின் மீதான எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திவிடுகிறார். ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் பரிதாபத்துடன்  எதிர்நோக்கும் காட்சி, நம்முடைய இதயத்தின் வலிமையை  சோதித்து பார்க்க சொல்கிறது !


பள்ளியின் தாளாளர் மற்றும் பெரிய மனிதரான விஜயன்  சொல்வதுதான் சட்டம் அந்த கிராமத்தில் !   (அஸ்வினி)மனைவியின்  உடல்நிலையை காரணம் காட்டி அவரின் தங்கையை மணம்முடிக்க முயல்கிறார். இதற்க்கு அவரின் மாமனாராக வரும் சாருகாசன் மறுக்கிறார். மனைவியின் மீது பஞ்சாயத்தில் களங்கம் சுமத்தி பிரிகிறார். பின் வேறு ஒரு பெண்ணை மணக்கிறார். உடல் நிலை மோசமாகி அஸ்வினி இறந்து போக, குழந்தைகளை வளர்க்க விரும்பும்  அஸ்வினியின்  தங்கையை அந்த பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ஒருவர் மணம் முடிக்க விரும்புகிறார். இதை விரும்பாத விஜயன் அவரை களங்க படுத்த முயல அதுவரை பொறுத்திருந்த ஊர் மக்கள் பொங்கி எழுகிறது. அவர் என்ன ஆனார் என்பது எதிபார்க்காத கிளைமாக்ஸ் . 

ஊர் பெரிய மனிதராக விஜயன் , மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார். மனைவியை  அடிமை போல் நடத்துவது, மனைவியின் தங்கையை அடைய முயற்சிப்பது என எதிர்மறை நாயகனுக்கான வேலையை சரியாக செய்திருக்கிறார். மனைவியின் தங்கையை பெண் கேட்டு மாமனாரிடம் பேசும் இடத்தில் மிரட்டாமல் கவர்கிறார்.

கணவனுக்கு பயந்து நடுங்கும் கதாபாத்திரத்தில் அஸ்வினி ! இவருடைய முகம் அனுதாபத்தை ஏற்படுத்துவது நம்மால் தவிர்க்க முடியவில்லை !  முதல் படம் என்றால் நம்ப முடியவில்லை !

முக்கியமான ஒன்று! தாயை கொடுமைபடுத்தும் தந்தையின் முன் வீர வசனம் பேசுவது , சபதம் போடுவது, உழைத்து முன்னேறுவது  என எந்த மசாலா வாசனையும் இல்லாமல் இந்த படத்தில் குழந்தைகளை குழந்தைகளாகவே வலம் வர விட்டிருப்பதற்காக இயக்குனருக்கு  தனியாக  சபாஷ் போடலாம் ! மேலும்  விஜயனின் மாமனாராக வரும் சாருஹாசனை முற்போக்கு சிந்தனைவாதியாக காட்டியிருப்பது கூடுதல் பலம் ! 

" பஞ்சாயத்தில் மனுஷங்கதான் வர்றாங்க ! பரவாயில்லை பஞ்சாயத்தை கூட்டுங்க " என அவர் சொல்லும்போது  தேர்ந்த நடிகரின்  முதிர்ச்சி !


மேலும் சில கதாபத்திரங்கள் நம்மை ஈர்க்கின்றன !  சுகாதார அதிகாரியாக வரும் சரத் பாபு , ஆசிரியர் என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளி படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக நாவிதர்  அஸ்வினி இறக்கும் பொது பேசும் வசனம்  " தம்பிக்கு முடி எடுக்கணும்னு சொல்லும் போதெல்லாம் , நேரம் வரட்டும்,நேரம் வரட்டும்னு சொல்வாங்களே!அந்த நேரம் இப்படியா வரணும்!" என கூறும்போது நம்மையும் அறியாமல் கண்கள் கலங்க செய்து விடுகிறது.

இறுதியில், குழந்தைகள் தனியாய் ஆற்றின் ஓரத்தில்  உதிரிப்பூக்களாக நடந்து செல்லும் காட்சி  , நம் மனதை விட்டு உதிர மறுக்கிறது !

தெளிவான கதை , நேர்த்தியான திரைக்கதை , எளிமையான  வசனங்கள்  என படம் மிக  மிக அருமை ! பாடல்களும் , பின்னணி இசையும் இளையராஜவிற்கு உரிய முத்திரை! இயக்குனர்  மகேந்திரன்  தமிழ் சினிமாவின் வரலாற்றின் தவிர்க்க முடியாத இயக்குனர்.


நன்றியுடன் 
இரா.மாடசாமி  

[மேலும் படிக்க>>>]

Monday 27 August 2012

வரலாற்றில் இடம் பிடித்த தமிழ் பதிவர் சந்திப்பு!

- 15 comments
வணக்கம் நண்பர்களே ,
                               பதிவர் மாநாடு   
 
பதிவர் சந்திப்பு பற்றிய சில  குறிப்புகளை எடுத்துக்கொண்டு  காலையில்  கிளம்பிகொண்டுருக்கையில்  என் மனைவி " எங்கே போறீங்க?" என கேட்டார். இணைய  எழுத்தாளர்கள்  சந்திப்பிற்கு  என்றேன். சரிங்க ! நீங்க ஏன் போறீங்க? அதுக்கு எழுத்தாளர்கள் தானே போகணும்  என்றார் . இந்த அவமானம் தேவயா ? என வடிவேல் போல மனதுக்குள் கேட்டுக்கொண்டு , பின்  சுதாரித்து கொண்டு  இதுதான் சந்தர்ப்பம் என்று கல்யாண பரிசு தங்கவேல் மாதிரி  பீலாவிட்டேன் ! (உங்களுக்கு  அந்த படத்தில் வரும் வைரவன் எழுத்தாளர்  ஜோக்  நினைவில் இருக்கும் என நினைக்கிறேன் )நான் பெரிய எழுத்தாளன் போலவும்,பிரபல எழுத்தாளர்கள் எனக்கு நண்பர்கள் எனவும் இஷ்ட்டத்துக்கு அள்ளி விட்டேன் !  உடனேயே  நானும் வருகிறேன் என அடம் பிடித்தார் ! அதற்கு அனுமதி கிடையாது என்றும்  அங்கு எழுத்தாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் கூறி  சமாளித்து  பேருந்து நிலையம் வந்தேன். ஞாயிற்று கிழமை  என்பதால் கூட்டம் அதிகம் இல்லை !  மண்டபம் வந்தடைந்தேன் !  நிறைய பேர் வந்திருந்தாலும் புதிய பதிவரான எனக்கு பரிச்சயம் இல்லா முகங்களாகவே இருந்தது!  

சிறிது நேரம் கழித்து , வீடு  திரும்பல் திரு.மோகன் குமாரிடம்  நானாகவே அறிமுகம் செய்து கொண்து இருக்கையில் அமர்ந்தேன். மூத்த பதிவர்களை சந்தித்தது மனதிற்கு  மகிழ்ச்சியாக இருந்தது ! பெண் பதிவர்கள் வந்தது  விழாவிற்கு கூடுதல் பலம் ! பின் விழா தொடங்கி அனைவரும் சுய அறிமுகம் செய்து கொண்டனர் ! நானும் தான் ! மதியம் வரை தனிமையிலே இருந்தேன்!  மதிய உணவு இடைவெளிக்கு  பின் சில  நண்பர்கள்  அறிமுகமானார்கள் ஒருவர்  வேல்வெற்றி    இன்னொருவர்  ஈகைவேந்தன்   சமூகத்தின் மீதும் தமிழ் மீதும்  மிகுந்த அக்கறை கொண்டவர்கள் என அவர்கள் பேசும் பேச்சிலேயே தெரிந்தது.  திரு.பட்டுக்கோட்டை பிரபாகர்  வந்து மூத்த பதிவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தது நெகிழ செய்தது .  பின் கவிதை வெளியீட்டு விழாவும்  நடைபெற்றது. விழாவிற்கு புதிய தலைமுறை செய்தி பிரிவிலிருந்து வந்தது புருவத்தை மேலே உயர்த்தியது!மண்டபம் முழுவதும்  கேமராக்களின் மின்னல் ஒளி  மின்னி கொண்டிருந்தது!எனக்கு புகைப்படம்  எடுக்கும்  எண்ணம்  இல்லாததால் கம் மென்று இருந்து விட்டேன்!பின்னர், வீட்டிலிருந்து அவசர அழைப்பு வர, கிளம்பி விட்டேன். வழி நெடுகிலும்  ஒரே சிந்தனை! அது என்னவென்றால், கோவில் படத்தில் வரும் வடிவேல் போல காசியப்பன் பாத்திரகடைக்கு சென்று ஒரு பரிசும் , பின்னர் ஒரு  சின்ன  மாலையும்  வாங்கி செல்ல வேண்டும் மனைவியை ஏமாற்ற! 


  இந்த நாள் வரலாற்றில் இடம் பெரும் நாளாக  போவது வீட்டிற்கு வந்த பின்தான் தெரிந்தது. ஆம் ! நமது இந்திய இளைஞர் கிரிக்கெட் அணியினர் உலக  கோப்பையை  வென்று  உற்சாகமளித்தனர். இப்போது   உங்களுக்கு புரிந்திருக்கும் தலைப்பின் பொருள் ! 

இந்த பதிவு மொக்கையாக இருந்தாலும்  மன நிறைவுக்காக எழுதியது! 



நன்றியுடன் ,

இரா.மாடசாமி. 

  



[மேலும் படிக்க>>>]

Monday 20 August 2012

அரசியல் தலைவர்களுக்கு பிடித்த திரைப்படங்கள்!

- 4 comments

வணக்கம் நண்பர்களே,
                     சென்ற வார இடுகையில்  சுஜாதா - தொடர் பதிவு  மிகுந்த வரவேற்ப்பை பெற்றது மிக்க மகிழ்ச்சி, ஓட்டு போட்டு கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!

[மேலும் படிக்க>>>]
 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger