Monday 30 December 2013

அப்பாவும் நானும்! தொடர்பதிவு-3!


வணக்கம் நண்பர்களே !
                                                  இதற்க்கு முன் நான் எழுதிய அப்பாவும் நானும் பகுதியை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் . படிக்காதவர்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் .



அப்பாவும் நானும்! தொடர்பதிவு-1!

அப்பாவும் நானும்!! -தொடர் பதிவு -2


குலாப்ஜாமூன்

அப்போது எனக்கு ஒரு 10-12 வயது இருக்கும் என நினைக்கிறேன் . அன்று பள்ளி விட்டு வீட்டிற்கு  வந்தவுடன் , லேசாக  காய்ச்சல் இருந்ததை அறிந்த எனது அப்பா என்னை மருத்துவரிடம கூட்டி சென்று பின்னர் அங்கிருந்து நேராக எங்களது  கடைக்கு கூட்டி சென்றுவிட்டார் . அங்கு ஒரு இருக்கையை போட்டு என்னை அமர வைத்தார் . நான் அப்படியே கடையை நோட்டமிட்டபடியே அப்பாவுக்கு உதவியாக எடுத்து கொடுத்துக்கொண்டு இருந்தேன் . அப்போதுதான் அது எனது கண்ணுக்கு புதிதாக தெரிந்தது.

நான் ," அப்பா அது என்னதுப்பா "?

அதுவா ! குலாப் ஜாமூன் !!

 சொல்லி கொண்டிருக்கும்போதே ஒரு வாடிக்கையாளர் அதனை கேட்டார்.

உடனே அப்பா அதற்க்கான பிரத்யேக கண்ணாடி கிண்ணம்  ஒன்றை எடுத்து அதில் குலாப் ஜாமூன் ஒன்றை போட்டு கொடுத்தார் .  இப்போது குலாப் ஜாமூனை விட அந்த கண்ணாடி  அழகாக தெரிந்தது எனக்கு  .

 அதை சாப்பிட்ட அந்த நபர் அதனை அப்பாவிடம் கொடுக்க , அப்பா  என்னிடம் கொடுத்து ,  "ஓரமா வை ! என்றார் .

அதை தடவி தடவி பார்த்துக்கொண்டே என்னை அறியாமல் கீழே விட்டு விட்டேன் . அது  பெரிய சத்தத்துடன்  கீழே விழுந்து நொறுங்கியது .

 சத்தம் கேட்டு  திரும்பிய அப்பா எனது தலையிலும், முதுகிலும்  அதே போன்ற சத்தத்தை ஏற்ப்படுத்தினார் .

அதை கண்ட வாடிக்கையாளர் , என்ன சார் ? பையன இந்த அடி அடிக்கிறீங்க ! 
 என்றார் .
 
அட போங்க சார் ! 6 வது படிக்கிறான் ஒரு பொறுப்பு இருக்க வேணாம் ? என்ன ஒரு அஜாக்கிரதை ! என்றவாறே உடைந்த கண்ணாடி துகள்களை எடுத்தார். 


அழுதுகொண்டே  கடையின் உட்புறமுள்ள ஒரு அறையில் ஒரு ஓரமாக படுத்து கொண்டேன். கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

 அதற்குப்பின்  எதுவும் பேசவில்லை. ஏங்கி ஏங்கி அழுதேன் ! அப்படியே கண்களை மூடிக்கொண்டு தூங்குவது போல நடித்தேன்.

சிறிது நேரத்துக்கு பின் அந்த அறைக்கு வந்த அப்பா,  ஒரு நிமிடம் என்னையே பார்த்துகொடிருந்தார் .

 ஒரு வேளை அடித்ததற்காக வருந்தியிருக்கலாம் என நினைக்கிறேன் !

கடையை அடைக்கும் முன் , தம்பீ! என அழைத்தார் .

சத்தம் கேட்டு எழுந்து வந்தேன் .

என்னை பார்த்து, நீ செஞ்சது தப்பா ? இல்லையா ! இப்படி அஜாக்கிரதையா இருக்கலாமா ! என கேட்டார் .

நான் அவர் சொல்வதை அப்படியே ஆமோதித்தேன் !

இனிமேல் ஜாக்கிரதையா இருக்கணும் சரியா ? என  ஒரு குலாப்ஜாமூனை அதே போன்ற  ஒரு கண்ணாடி கிண்ணத்தில் போட்டு நீட்டினார் !

நான்  வாங்காமல் நின்றேன்.


என்னை முத்தமிட்டு கண்ணீரை துடைத்து விட்டார் . பின்னர் , அவரே எடுத்து ஊட்டியும் விட்டார்  !


அடித்த வலி மறைந்து அன்பில் வலியை  உணர்ந்தேன் !

குலாப்ஜாமூன் இரண்டு மடங்கு இனிப்பதாக தோன்றியது !

*********************************************************************************

அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

குறிப்பு : இப்பொது, வானவில் தளத்தின் பேஸ்புக் பக்கத்தை உருவாக்கியிருக்கிறேன்.பதிவுகளை பெற  விரும்புவோர்  வானவில் பக்கத்தை  லைக்  செய்து , பதிவுகளை பெற்றுக்கொள்ளலாம் !

**********************************************************************************


                                                                 நன்றி

வானவில் பேஸ்புக் பக்கம் வடிவமைப்பு தகவல் உதவி : திரு.பிரபு   கற்போம் வலைத்தளம் 

 தற்போதைய வானவில் தளத்தின் வடிவமைப்பு உதவி திரு .தங்கம் பழனி அவர்கள் தொழில்நுட்பம் வலைத்தளம் )





நன்றியுடன் !

இரா. மாடசாமி



















Related Posts Plugin for WordPress, Blogger...

2 comments :

  1. சுவையான அன்பின் (ஜாமூன்) பதிவு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger