Friday 30 May 2014

மின்சார பிரச்சினைக்கு அரசு மட்டும் காரணமா ?



வணக்கம் நண்பர்களே !

                          இன்றைய கால கட்டத்தில் மின்சாரம் என்பது நமது வாழ்வில் இன்றியமையாத நமது வாழ்வில் இரண்டற கலந்து விட்ட ஒன்றாகும் ! இந்த மின்சாரத்தை செலவழிப்பதில் காட்டும் அக்கறையை  சேமிப்பதில் நாம் காட்டுவத்தில்லை ! ஒரு சின்ன உதாரணம் ! பகலில் இரு சக்கர வாகனத்தில்  முகப்பு விளக்கை எரிய விட்டு செல்லக்கூடாது என்ற விழிப்புணர்வை பெற்றிருக்கும் நாம் ! வீட்டில் தேவை இல்லாமல் விரையமாகும் மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏன் பெறவில்லை ! நகரங்களில் மின்சாரத்தை  சொகுசாக செலவழித்து வாழும் நாம் கிராமங்களில் உள்ள மக்களை நினைத்து பார்க்கிறோமா?  தொடர்ந்து அரசை குறை கூறி கொண்டிருக்கும் நாம் அதை சேமிக்க நாம் என்ன முயற்சி செய்தோம் ! ஆகையால் மின் சிக்கனத்தை கடைப்பிடித்து நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேற கைகொடுப்போம் !


 மின்சாரத்தை சேமிக்கும் சில யோசனைகள் உங்களுக்காக! 


1. பகலில்  A/C போடுவதை முடிந்தவரை தவிர்க்கவும் !

2. சூரிய  ஒளி வீட்டிற்குள் விழும் பட்சத்தில் பகலில் விளக்குக்குகள் எரிய விடுவதை தவிர்க்கவும்

3.இரவு முழுக்க  அலைபேசி மற்றும்  laptop க்கு charge செய்ய வேண்டாம் ! தேவை படும்போது மட்டும் போடவும்!  அதே போல சார்ஜ்
 செய்து விட்டு தவறாமல் மின் இணைப்பை துண்டிக்கவும் !

4. தண்ணீர் இறைக்கும் பம்ப் போட்டுவிட்டு தொட்டியில்  நிறைந்து வழிந்தோட விடாமல் சரியான நேரத்தில் அணைக்கவும் ! 

5. டிவி பார்த்து முடித்து விட்டு அதில்  உள்ள ON/OFF பட்டனை மட்டும் அணைப்பதோடு மட்டும் இல்லாமல் மெயின் சுவிட்ச்சையும் சேர்த்து அணைக்கவும் !

6. வெயில் காலங்களில் Washing Machine இல்  உள்ள  Spin மற்றும்  Drier வசதியை பயன்படுத்தாமல்  வெளியில் உலர்த்தலாம் !

7. சமையல் கூடங்களில் வேலை இல்லாத நேரத்தில் Exhaust Fan ஓடுவதை நிறுத்தி வைக்கவும் !
  
8. பகலில் வீட்டிற்கு வெளியே எரியும் விளக்குகள் எரிவதை தவிர்க்கவும்  !

இது போன்ற மேலும் சில யோசனைகள்  உங்களிடம் இருந்தால் கருத்து பெட்டியில் தெரிவிக்கலாம் !






நன்றியுடன் !

இரா.மாடசாமி
Related Posts Plugin for WordPress, Blogger...

0 comments :

Post a Comment

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger