Monday 6 August 2012

கவிதையா! நகைச்சுவையா !!நீங்களே சொல்லுங்க !!!

வணக்கம் நண்பர்களே ,
                                                 சென்ற வாரம் முழுவதும் கட்டுரையாகவும் , சினிமாவாகவும் எழுதி விட்டேன். ஆகையால் இந்த வாரம் நகைச்சுவை எழுதலாமா அல்லது கவிதை  எழுதலாமா என யோசித்தேன். பின்னர் இரண்டும் சேர்ந்த கலவையாக  எழுதினால் என்ன  என்று யோசித்ததன் விளைவே கீழே உள்ள தொகுப்பு ! பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை போடவும்.அது  எனக்கு இன்னும் ஊக்கத்தை  தரும் !


இதன் முந்தைய அனைத்து பதிவிற்கும் இங்கே  சொடுக்கவும் 





                                                              முத்தம் 
 
மனைவிக்கு
முத்தம் கொடுத்தவனை
அடிக்க முடியவில்லை
அவன் எனக்கு
மகனாய் போனதால்



தன்னம்பிக்கை 

காதலில் தோற்ற ஒவ்வொருவருக்கும் தேவை 
இந்த தன்னம்பிக்கை வரிகள்.
"த்ரிஷா இல்லாட்டி திவ்யா"அவ்வ்வ் !!!!





                                                                                         அடடே!! 
இரண்டாவது முறை பரிமாறிய
மனைவியிடம் சொன்னேன்
தக்காளி சாதம் சூப்பர் என்று !!
"நங் " என்று வைத்த படியே
கோபத்துடன் சொன்னாள்
இது பிரியாணி என்று  !!!

அடடே கொஞ்சம் அவசரபட்டு விட்டோமோ !!
 





யோசனை ! 
மனைவியிடம் சண்டையிடும்  போதெல்லாம்
யோசிப்பேன் !
எவண்டா இந்த பூரிகட்டய கண்டுபிடிச்சது ?

என்னமா வலிக்குது அவளுக்கு!
அப்படீன்னு சொன்னா நம்பவா  போறீங்க!






                                                                                                           கடவுள்

துன்பம் வரும்போதெல்லாம்
கடவுளிடம் கோபப்பட்டு கேட்பேன்
இறைவா! என்னை இப்போதே  கூட்டிச்செல்!!

 எப்போதும் பேசாத கடவுள் இப்போது  பேசினார் 

    "கூப்பிட்டாலும் வரமாட்டான்
   என்ற தைரியத்தில் கூப்பிடுகிறாயோ!
  மவனே வந்தேன்னு வச்சுக்க!



நன்றி : பட உதவி : google Images


நன்றியுடன்
இரா.மாடசாமி 
Related Posts Plugin for WordPress, Blogger...

0 comments :

Post a Comment

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger