அவசர அழைப்பு !!!
சாப்பிட்டு கொண்டிருந்த தனசேகரை ஆடி போனா ஆவணி பாட்டு அலைபேசியில் அழைத்தது. அலைபேசி திரையில் யாரென பார்த்தான் . சந்திரன் அழைக்கிறார் என்று காண்பித்தது . வாயில் பரோட்டாவை தினித்தவாறே இயக்கினான் .
தனசேகர் : சொல்லு மச்சி !
சந்திரன் : ________________
தனசேகர் : அய்யயோ ! எப்போ ?
சந்திரன் : ________________
தனசேகர்: பொருளு எடுத்துட்டு போனியா ?
சந்திரன் : _________________
தனசேகர்: போடங்கோ! எத்தனைவாட்டி சொல்றேன் பொருள் இருக்ககான்னு செக் பண்ணிட்டுப்போண்ணு ! இப்படி தனியா போய் மாட்டிகிட்டியேடா !
சந்திரன் :__________________
தனசேகர்: எத்தனை பேரு ?
சந்திரன்:___________________
தனசேகர்: சரி இப்போ எங்க இருக்க நீ ?
சந்திரன் : __________________
தனசேகர் : காஞ்சிபுரம் கவர்மென்ட் ஹாஸ்பிட்டலா ? சரி இரு வரேன் !
பாதி உரையாடலை படித்து முடித்ததும் பலபேருக்கும் இந்த கதை கீழே உள்ளவாறு இருந்திருக்கும் என யூகித்திருக்கலாம் !
தனசேகர் : சொல்லு மச்சி !
சந்திரன் : ஆனந்து ,ஆள வச்சு அடிச்சுட்டாண்டா !
தனசேகர் : அய்யயோ ! எப்போ ?
சந்திரன் : இப்போதான்டா
தனசேகர்: பொருளு எடுத்துட்டு போனியா ?
சந்திரன் : இல்லடா
தனசேகர்: போடங்கோ! எத்தனைவாட்டி சொல்றேன் பொருள் இருக்ககான்னு செக் பண்ணிட்டுப்போண்ணு ! இப்படி தனியா போய் மாட்டிகிட்டியேடா !
சந்திரன் : எதிர்பார்க்கலை மச்சி !
தனசேகர்: எத்தனை பேரு ?
சந்திரன்: நாலஞ்சுபேரு வந்தாங்கடா
தனசேகர்: சரி இப்போ எங்க இருக்க நீ ?
சந்திரன் : காஞ்சிபுரம் கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் !
தனசேகர் :காஞ்சிபுரம் கவர்மென்ட் ஹாஸ்பிட்டலா ?சரி இரு வரேன் !
ஆனா நான் கதையை மேல உள்ளது மாதிரி நினைச்சு எழுதலைங்க ! கொஞ்சம் கீழே படிங்க!
தனசேகர் : சொல்லு மச்சி !
சந்திரன் : வண்டி பஞ்சர் ஆயிடுச்சு!
தனசேகர் : அய்யயோ ! எப்போ ?
சந்திரன் : இப்போதான்டா
தனசேகர்: பொருளு எடுத்துட்டு போனியா ?
சந்திரன் : லோக்கல் சவாரி அதான் ஜாக்கி லிவரு எதுவும் எடுக்காம கேர்லெஸ்ஸா இருந்துட்டேன் !
தனசேகர்: போடங்கோ! எத்தனைவாட்டி சொல்றேன் பொருள் இருக்ககான்னு செக் பண்ணிட்டுப்போண்ணு ! இப்படி தனியா போய் மாட்டிகிட்டியேடா !
சந்திரன் : சரி மச்சி ! சும்மா உதார் உடாம குய்க்கா கெளம்பி வா ! கஸ்டமர் கார்லயே வெய்ட் பண்றாங்க !
தனசேகர்: எத்தனை பேரு ?
சந்திரன்: நாலு பெருசு ! ரெண்டு சிறுசு !
தனசேகர்: சரி இப்போ எங்க இருக்க நீ ?
சந்திரன் : காஞ்சிபுரம் கவர்மென்ட் ஹாஸ்பிட்டல் பக்கத்துல !
தனசேகர் : காஞ்சிபுரம் கவர்மென்ட் ஹாஸ்பிட்டலா ? சரி இரு வரேன் !
நண்பர்களே ! விருமாண்டி ஸ்டைல்னு சொன்னவுடனே அருவா கதைன்னு நெனச்சீங்களா ! அதான் இல்ல !அந்த படத்துல ஒரே கதையை ரெண்டு பெரும் வேற வேற மாதிரி சொல்லுவாங்க ! இங்க கதை வேற! வசனம் ஒன்னு !
இந்த படைப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா ! எனது யோசனையில் தோன்றிய, நான் முதன் முதலாக எழுதிய இந்த படைப்பை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்! பிடித்திருந்தால் கருத்திடவும் .
நன்றியுடன் !
இரா. மாடசாமி
Tweet | |||||

படைப்புக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteகருத்துக்கு நன்றி சகோதரி !
ReplyDeleteவித்தியாசமான சிந்தனை பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி நண்பரே !
Deleteஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
ReplyDeletehttp://otti.makkalsanthai.com/upcoming.php
பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,