Friday 7 September 2012

எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !

வணக்கம் நண்பர்களே ! 
                                         அண்மையில் நடந்த சிவகாசி வெடிவிபத்து என்னை நிலை குலைய செய்தது  !  விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவன் என்கிற முறையிலும் , அந்த ஊரில் தங்கி படித்தவன் என்கிற முறையிலும் என்னை இன்னும் வெகுவாகவே பாதித்தது!  வெடி விபத்தில் இறந்து போன அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை  இந்த கவிதை/பாடல் மூலம் தெரிவித்து கொள்கிறேன் !

தெற்கு தமிழ் நாட்டினிலே தொழில் செய்யும்  நகரமுங்க !
கரிசல் மண் பூமியிலே கந்தக காத்து வீசுமுங்க !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !


பட்டாசு செய்வதிலே பெயர் வாங்கி குடுத்ததுங்க  , இன்று 
பட்டாசு விபத்துக்கு பெயராகி போனதுங்க !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி ! 



ஒரு நாளு பண்டிகையாம் உங்களுக்கு தீபாவளி ! அதுக்கு 
ஒரு வருஷம் உழைப்பாங்க எங்க ஊரு தொழிலாளி !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !

மாவட்ட செய்தியிலே ஓரமாக வந்ததுங்க ! இன்று 
மாநிலத்தின் செய்தியிலே தலைப்பாக வந்ததுங்க !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !

அப்பப்போ வெடிவிபத்தில் பெரிய சத்தம் கேக்குமுங்க ! 
அப்பமட்டும்  சர்க்காரு சைரன் சத்தம் கேக்குமுங்க ! 
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !
 
பாஸ்பரசும் , கந்தகமும்  வாழ்க்கையாகி போனதுங்க !எங்களுக்கு
பட்டாசு வெடி விபத்து  வழக்கமாகி போனதுங்க !
எங்க ஊரு சிவகாசி ! எங்க ஊரு சிவகாசி !





நன்றியுடன் !
இரா.மாடசாமி 

                                        
Related Posts Plugin for WordPress, Blogger...

4 comments :

  1. உணர்ச்சிப் பூர்வமான கவிதை. சொல்லப் போனால் கவிதை போல் இல்லை நாட்டுபுறப் பாடல் போல் இருந்தது...

    ReplyDelete
  2. மறக்கமுடியாத கொடிய சம்பவம்..

    மீண்டும் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள அனைவரும் உறுதிஎடுக்க வேண்டும்

    ReplyDelete
  3. @சீனு,
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. @கவிதை வீதி... // சௌந்தர் //
    ஒவ்வொரு முறையும் அரசாங்கம் இதை சொன்னாலும் விபத்து மட்டும் நடந்து கொண்டேதான் இருக்கிறது நண்பரே !

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger