Monday 16 July 2012

மழலையின் அறிவு

அனைவருக்கும்  இனிய  வணக்கம் , நீண்ட இடைவெளிக்குப்பின் இப்பதிவை எழுதுகிறேன் .  பொதுவாக குழந்தைகள்  எப்போதும் நமக்கு ஏதோவொன்றை உணர்த்தி கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் அறிவும் , குறும்பும் , ஆச்சர்யபடவைக்கிறது.  இங்கே எனது மகனுக்கும் மனைவிக்கும் நடந்த  உரையாடலின் ஒரு பகுதியை கவிதை!!!!(குழந்தையின் உரையாடல் எல்லாமே கவிதைதானே )நடையில் எழுதியிருக்கிறேன் .


சுவற்றில் கிறுக்கும் 

மூன்று  வயது 

 மகனை பார்த்து 

அரட்டி கேட்டாள்  என் மனைவி 

உனக்கு அறிவு  இருக்கா ?

பயந்தபடியே  அவனும் சொன்னான் 

என்கிட்ட பென்சில்தான்  இருக்கு !!!!!



முப்பது வருடம் கற்காத  அறிவை

மூன்றே வினாடியில்  கற்பித்து விட்டான்

எனக்கும் என் மனைவிக்கும்

அறிவு என்றால்  என்ன என்று ?




குழந்தையிலிருந்து  நாம் ஏதோ ஒன்றிற்கு நாம் தீவிர ரசிகராகவும் ,பற்று உடையவராக இருந்தாலும்,   நம் குழந்தையின் குறும்பு,பேச்சு ,செயல், இவை அனைத்தும் அந்த தீவிர ரசிப்புதன்மையை  உடைத்துவிடுகிறது என்பது 
 அனைவராலும் ஏற்றுகொள்ளக்கூடிய உண்மை.





உணர்வுடன்
இரா .மாடசாமி  
 
Related Posts Plugin for WordPress, Blogger...

0 comments :

Post a Comment

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger