Saturday 21 July 2012

வீரபாண்டிய கட்டபொம்மனை ரீமேக் பண்ணுகிறார் மணிரத்னம்!!!!!

 
வணக்கம் நண்பர்களே !

தலைப்பை  பார்த்துவிட்டு புது  மேட்டரா  இருக்கே என படிக்க வந்த அனைவருக்கும் வணக்கம்! ஒரு நகைச்சுவை (கற்பனை)  பதிவை போடலாம்னு கழிவறையில் உட்கார்ந்து கன நேரம் யோசிச்சபோ  கிடைத்த தலைப்பு தான் இது !
  .
இந்த  பதிவு யார் மனதையும் புண்படுத்த எழுத வில்லை!  அதையும் மீறி புண் படுத்தி இருந்தால் தயை கூர்ந்து மன்னித்தருள்க!
 

   சரி நாம மேட்டருக்கு வருவோம்நம்ம மணி ரத்தினம் சார் வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்த ரீமேக் பண்ணி வசனம்  எழுதி இருந்தார்னா எப்படி இருக்கும்னு  ஒரு சின்ன கற்பனை!!!! 


 இடம்: ஒரு அருவி அருகில்  அரண்மனை ! ( மணிரத்னம் படம்ல அருவி கண்டிப்பா இருக்கணும்)
நேரம் : இரவு (மேல சொன்ன அதே மணி ரத்னம் தான் காரணம் )

( நம்ம தமிழ் படத்துல தான் இங்கிலீஷ் காரன்  கூட தமிழ் பேசுவான் அதனால லாஜிக்லாம் பாக்க  கூடாது வசனம் தான் முக்கியம்  )
காட்சி- 1

ஜாக்சன் :-   ஜாக்சன் !

வீர பாண்டிய கட்ட பொம்மன்பொம்மன் ! வீர பாண்டிய கட்ட பொம்மன் !! (மீசையை முறுக்கி கொண்டே )
பெயரின் நீளம் கருதி இனி ஜாக்சன் , ஜாக்  எனவும் வீரபாண்டிய கட்ட பொம்மன் .வீரா வாகவும் !! 



ஜாக்: குடுக்கணும் !
    
வீரா : என்ன ?!
ஜாக்: வரி,வட்டி,கிஸ்தி!

வீரா: முடியாது!?
ஜாக்: குடுக்க வைப்பேன் 

வீரா: மிரட்டுறீங்களா கலெக்டர் சார், இது வீரா சார்வீராப்பு காட்டாதீங்க! , வீணா போய்டுவீங்க!
 
ஜாக் : நிறுத்து உன்  பேச்சை !

வீரா : முதல்ல நீ  நிறுத்து! நான் நிறுத்துறேன் !!
ஜாக்: எதை நிறுத்தனும் ?
வீரா: ஒங்க ஊரு பொருள விக்கிறதுக்கு வந்த நீ!, எங்ககிட்டயே வரி வாங்குறியே அத நிறுத்துநான் நிறுத்துறேன் !

 எங்க ஆளுங்கள கைக்குள்ள போட்டுக்கிட்டு எங்களையே காட்டி குடுக்க சொல்ற பார்! அத நிறுத்து! நான் நிறுத்துறேன் !

நீ காசு குடுத்ததும் பல்ல காட்டிகிட்டு எங்கள காட்டி குடுக்குறான் பார் ஒரு கம்மிநாட்டி அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன் !



அடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன்!!!! 


(வில்லன் வாய்ஸ் கொடுப்பது நம்ம கெளதம் -எப்பவும் அவர்தானே  வில்லனுக்கு வாய்ஸ் கொடுப்பாரு )


ஜாக்சன்  ( தனது  கூட்டாளிகளுடன் ) :  நாம எங்க போனாலும் -----தா  அந்த ஊற ஒரு கலக்கு கலக்கணும் ! அந்த ஊரை நாம ஆளனும்!
அந்த பாண்டியன்  ரொம்ப பிரச்சினை பண்றான் ! தூக்கிருங்க ! என்று சொல்லி கொண்டிருக்கும்போதே!
 
தூரத்தில் கோட்டையின் கதவுகளை   உடைத்து கொண்டு வீர பாண்டியன் எனும் பாண்டியன் வருகிறார்!

 பாண்டியன்:- இந்த பாண்டியன் ரொம்ப பிரச்சினை பண்றான் ! கிஸ்தி! வரி ! வட்டி எதுவும் தரமட்டிகிறான்,  அவன் கண்ண எடுத்துட்டு வந்தா எதோ ஐம்பது பொன் காசு தாரேன்னு சொன்னியாமே ! வா ! என் கண்ண பொட்டயாக்கு !  என தனது இமைகளை  கைகளால் விரித்து கண்களை காட்டுகிறார்

ஜாக்சன்: வேணாம் பாண்டியன் என்னபத்தி உனக்கு தெரியாது !?

பாண்டியன் : நீ யாருன்னும்  தெரியும் ! ஒங்க அம்மா இங்க எப்படி வந்தாங்க அப்படின்னும் தெரியும்டா!

 அந்த நேரத்தில்  பின்னணி பாடலுடன் ஒரு சண்டை காட்சி!

என்ன பாக்குறீங்க ! படம் முடிஞ்சு போச்சு ! ஒரே காட்சியில ரெண்டு படம் பாத்த மாதிரி இருந்துச்சா  ! அப்புறம் என்ன ! பதிவு எப்படி இருக்கிறது  என மறக்காமல்  கமெண்ட் போட்டுட்டு  கெளம்புங்க  !!!



நன்றியுடன்
இரா. மாடசாமி









Related Posts Plugin for WordPress, Blogger...

0 comments :

Post a Comment

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger