Friday 27 July 2012

பட்டையை கிளப்பும் பராசக்தி சிவாஜி கணேசன் !!!

வணக்கம் நண்பர்களே !
                                                    பதிவுலகம்!  விசித்திரமான எத்தனையோ பல பதிவர்களை பார்த்திருக்கிறது ! விசித்திரமான பதிவுகளையும் பார்த்து இருக்கிறது! ஆனால்  இந்த பதிவும்  விசித்திரமான பதிவு அல்ல , நானும்  விசித்திரமான பதிவாளர்  அல்ல! 



ப்ளாக் உலகில்  போஸ்ட் எழுதும் சாதாரணமானவன் தான்  நான் !

கட்டுரை  என்ற பெயரில்- கதை விட்டுருக்கிறேன்!

கவிதை என்ற பெயரில் - கண்டதை  எல்லாம்  எழுதி இருக்கிறேன்

நகைச்சுவை எனும் பெயரில் - நக்கல் பண்ணியிருக்கிறேன்



இப்படி எல்லாம் குற்றம் சுமத்தபட்டிருக்கிறேன் நான்!







 நீங்கள் நினைப்பீர்கள் நான்  இதை மறுக்க போகிறேன் என்று! இல்லை ! இல்லை ! நிச்சயமாக இல்லை !


 ஏன் எழுதினேன்  கட்டுரை இடுகை ? என்  கட்டுரையை படித்து நான்கு பேர் திருந்துவார்கள் என்பதற்க்காகவா !   இல்லை  ஆறாம் வகுப்பில்   கட்டுரையில் 6  மார்க் போட்ட  ஆசிரியரை பழி வாங்கத்தான் !

ஏன் எழுதினேன் கவிதை இடுகை ?  நன் ஒரு பெரிய கவிஞர்  ஆவதர்க்காகவா! இல்லை! நீ கழுதை கூட மேய்க்க லாயக்கில்லை என்று  சொன்னாரே என் தந்தை ! அவருக்கு நான் யார் என காட்டத்தான் !

ஏன் எழுதினேன் நகைச்சுவை இடுகை ? எனக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்பதாலா! இல்லை !   நகைச்சுவை எனும் பேரில் நாலு பேரை ஓட்டலாம் என்பதற்காக !

உனக்கேன் இந்த ஓவர் சீன்  !  யாருமே போடாத சீன்  ! என்று கேட்கலாம் ! நானே பாதிக்க பட்டேன் ! நேரடியாக பாதிக்க பட்டேன் ! என் சுய நலத்திலே பொது நலம் கலந்திருக்கிறது ! 

ஆம்!இந்த பதிவர் கடந்து வந்த  பாதையை கொஞ்சம் பின்னோக்கி பாருங்கள்  Powerstar படங்களை பார்த்ததில்லை நான் ! ஆனால் பாக்யராஜ் படங்களை பார்த்திருக்கிறேன் ! Pizza சாப்பிட்டதில்லை நான் ! ஆனால் பிரியாணி சாபிட்டுருக்கிறேன்!

 சூப்பராக எழுத  ஒரு போஸ்ட் ,மொக்கையாக  எழுத ஒரு போஸ்ட் ,  பதிவுலகின் தலை எழுத்திற்கு நான் மட்டும் விதி விலக்கா?

ஆனந்த விகடன்  !!!  எனக்கு பதிவுலகத்தை அறிமுகம் செய்தது! அதன்  மூலம் பதிவெழுத வந்தேன்! இதோ இங்கே எனது Profile Picture ல்  இருக்கிறாரே சுஜாதா,  இவரின் எழுத்தில் மயங்கினேன்!எனது அறிவை மூலதனமாக போட்டு பதிவெழுத ஆரம்பித்தேன். கண்கள் சிவந்து , உடல் மெலிந்தேன்! பின் பைத்தியக்காரன் ஆனேன் !


தொடர் பதிவெழுதினேன் ! கமெண்ட் விழவில்லை !

கட்டுரை பதிவெழுதினேன்!   கமெண்ட் விழவில்லை !

தகவல் பதிவு எழுதினேன் ! கமெண்ட் விழவில்லை !

எழுதினேன் ! எழுதினேன் ! எழுதினேன் ! பக்கத்தின்  ஓரம்  வரை எழுதினேன் !

பின் சோகமாய் ஒரு சோடா குடித்து விட்டு மட்டயாகிவிட்டேன் !


என்ன செய்து இருக்க வேண்டும் ! இந்த பதிவுலகம்!

என் பதிவை படித்திருக்க வேண்டும் ! கம்மென்ட்டை போட்டிருக்க வேண்டும்! வோட்டை குத்தியிருக்க வேண்டும்   ! என் வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும் !

செய்தார்களா இந்த பதிவர்கள் ! எழுத விட்டார்களா இந்த அப்பாவி பதிவரை !


இதற்கெல்லாம் யார் காரணம்!

வேற யாரு !நீங்கதான்! போதுங்க படிச்சது ! அப்டியே முழுக்க  எழுதுறதுக்கு  நான் என்ன கலைஞரா? 


                                 

நன்றியுடன்.
இரா.மாடசாமி

நன்றி: பட உதவி: Google Images
             
Related Posts Plugin for WordPress, Blogger...

3 comments :

  1. மரண மொக்கை ஹி ஹி ஹி!

    ReplyDelete
  2. நல்ல கற்பனை திறன் நண்பா! தொடர்ந்து இது போல் எழுத முயலுங்கள்!

    நேசங்களுடன் வரலாற்று சுவடுகள்!

    பின்குறிப்பு:
    கருத்துரை சொல் சரிபார்ப்பை நீக்குங்கள்!

    ReplyDelete
  3. நண்பரே, என்னுடைய தளத்திற்கு வருகை தந்து பின்னூட்டம் இட்டதற்கும் , ஆலோசனை வழங்கியதற்கும் மிக்க நன்றி ! தொடர்ந்து வருகை தந்து உங்கள் மேலான கருத்துக்களை இடவும்.

    நன்றியுடன்
    இரா.மாடசாமி

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் என்னை மேம்படுத்தும்!

 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger